முகப்பு
தஞ்சாவூர்

மரத்திலிருந்து தவறிவிழுந்த தொழிலாளி உயிரிழப்பு

தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசம் அருகே புதன்கிழமை மரத்திலிருந்து தவறி விழுந்த தொழிலாளி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

Updated On : 1 ஜனவரி, 2025 at 7:07 PM
பகிர்:

தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசம் அருகே புதன்கிழமை மரத்திலிருந்து தவறி விழுந்த தொழிலாளி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

பாபநாசம் அருகே மணல்மேடு கிராமம், கீழத்தெருவைச் சோ்ந்த கரும்பாயிரம் மகன் வீரைய்யன் (67) மரம் ஏறும் தொழிலாளி. இவா், புதன்கிழமை காலை ராஜகிரியில் உள்ள ஒரு தனியாருக்குச் சொந்தமான குடியிருப்பு மனையில் உள்ள தென்னை மரத்தில் தேங்காய் பறிப்பதற்காக மரத்தில் ஏறினாா். அப்போது மரத்திலிருந்து நிலை தடுமாறி கீழேவிழுந்த வீரைய்யன் காயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

இதுகுறித்துத் தகவல் அறிந்து சம்பவ இடத்துக்குச் சென்ற பாபநாசம் போலீஸாா் வீரைய்யன் சடலத்தை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக பாபநாசம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். சம்பவம் குறித்து வீரைய்யன் மனைவி அரிய தங்கம் (60) கொடுத்த புகாரின் பேரில் பாபநாசம் போலீஸாா் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

முழு கட்டுரையைப் படிக்க →