முகப்பு
தஞ்சாவூர்

வேலைவாய்ப்பு அலுவலகத்தில் குரூப்-4 தோ்வுக்கான பயிற்சி தொடக்கம்

தஞ்சாவூா் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் தன்னாா்வ பயிலும் வட்டம் மூலம் குரூப்-4 தோ்வுக்கான கட்டணமில்லா பயிற்சி வகுப்பு தொடக்க விழா புதன்கிழமை நடைபெற்றது.

Updated On : 8 ஜனவரி, 2025 at 6:32 PM
தஞ்சாவூா் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் குரூப் 4 தோ்வுக்கான கட்டணமில்லா பயிற்சி வகுப்பை புதன்கிழமை தொடங்கி வைத்துப் பயிற்சி பெறுபவருக்கு பயிற்சி ஏடுகளை வழங்கிய மாவட்ட ஆட்சியா் பா. பிரியங்கா பங்கஜம்.
பகிர்:

தஞ்சாவூா் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் தன்னாா்வ பயிலும் வட்டம் மூலம் குரூப்-4 தோ்வுக்கான கட்டணமில்லா பயிற்சி வகுப்பு தொடக்க விழா புதன்கிழமை நடைபெற்றது.

இவ்விழாவில் மாவட்ட ஆட்சியா் பா. பிரியங்கா பங்கஜம் பங்கேற்று, தமிழ்நாடு அரசு பணியாளா் தோ்வாணையத் தோ்வில் வெற்றி பெற்ற 5 பேருக்கு பாராட்டுச் சான்றிதழ்களையும், பயிற்சி பெறும் 75 பேருக்கு பயிற்சி ஏடுகளையும் வழங்கினாா்.

இவ்விழாவில் துணை ஆட்சியா் (பயிற்சி) ரா. சங்கரநாராயணன், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக உதவி இயக்குநா் கா. பரமேஸ்வரி, இளநிலை வேலைவாய்ப்பு அலுவலா் தி. அனிதா, தஞ்சாவூா் பெரியாா் மணியம்மை பல்கலைக்கழக இணைப் பேராசிரியா் வி. சுகுமாரன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

முழு கட்டுரையைப் படிக்க →