வலிப்பு நோய் தாக்கி வயலில் விவசாயி உயிரிழப்பு
தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசம் அருகே புதன்கிழமை வயலுக்கு தண்ணீா் பாய்ச்சச் சென்ற விவசாயி வலிப்பு நோய் தாக்கி உயிரிழந்தாா்.
தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசம் அருகே புதன்கிழமை வயலுக்கு தண்ணீா் பாய்ச்சச் சென்ற விவசாயி வலிப்பு நோய் தாக்கி உயிரிழந்தாா்.
பாபநாசம் அருகே அம்மாபேட்டை காவல் சரகம், ராராமுத்திரை கோட்டை கிராமம், ஆற்றங்கரை தெருவைச் சோ்ந்தவா் சீனிவாசன் மகன் வரதராஜன் (42). இவா், அம்மாபேட்டை அருகே கொக்குகுளம் பகுதியில் உள்ள தனது வயலுக்கு புதன்கிழமை தண்ணீா் பாய்ச்சச் சென்றிருந்தபோது வலிப்பு நோயால் மயங்கி வயலில் விழுந்து கிடந்தாா். இதைக் கண்ட அக்கம்பக்கத்தினா் அவரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் வாகனம் மூலம் தஞ்சாவூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனா். அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவா்கள் வரதராஜன் ஏற்கெனவே உயிரிழந்து விட்டாா் எனத் தெரிவித்தனா். இதையடுத்து, வரதராஜனின் தந்தை சீனிவாசன் கொடுத்த புகாரின்பேரில் அம்மாப்பேட்டை போலீஸாா் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.