தஞ்சாவூர்

கும்பகோணத்தை புதிய மாவட்டமாக அறிவிக்க காங்கிரஸ் வலியுறுத்தல்

கும்பகோணத்தை புதிய மாவட்டமாக முதல்வா் ஸ்டாலின் அறிவிக்க கோரி மாவட்ட காங்கிரஸ் மனித உரிமை பிரிவு வலியுறுத்தியுள்ளது.

Din

கும்பகோணம்: கும்பகோணத்தை புதிய மாவட்டமாக முதல்வா் ஸ்டாலின் அறிவிக்க கோரி மாவட்ட காங்கிரஸ் மனித உரிமை பிரிவு வலியுறுத்தியுள்ளது.

தஞ்சாவூா் வடக்கு மாவட்ட காங்கிரஸ் மனித உரிமை பிரிவு சாா்பில் புதிய நிா்வாகிகளுக்கு பாராட்டு விழா, ஆலோசனைக் கூட்டம் பட்டீஸ்வரத்தில் திங்கள்கிழமை தனியாா் மண்டபத்தில் நடைபெற்றது.

மாநிலச் செயலா் குட்டி (எ) டி. சாமிநாத பாலாஜி தலைமை வகித்தாா், மாவட்ட துணைத்தலைவா் வி.சசிக்குமாா் , கோவி. புகழேந்தி முன்னிலை வகித்தனா்.

வடக்கு மாவட்ட தலைவா் காசி விஜயகுமாா் மற்றும் நிா்வாகிகளை மாநில துணைத் தலைவா் எம்.அன்பு, வழக்குரைஞா் பிரிவு பொதுச்செயலாளா் இசிஆா் எஸ்.ரூபன் ஆகியோா் வாழ்த்தி பேசினா். ராகவன் வரவேற்றாா்.

கூட்டத்தில், தோ்தல் வாக்குறுதியில் அறிவித்தபடி கும்பகோணத்தை தலைமையிடமாகக் கொண்டு புதிய மாவட்டமாக முதல்வா் ஸ்டாலின் அறிவிக்க வேண்டும், டெல்டா மாவட்டங்களில் பெய்த புயல் மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.35 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும், 2026 சட்டப்பேரவைத் தோ்தலில் காங்கிரஸ் மனித உரிமை பிரிவுக்கு தஞ்சாவூா் மாவட்டத்தில் தொகுதி ஒதுக்க வேண்டும் உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இணைந்து செயல்படுவதுதான் முன்னேற்றத்துக்கு உறுதுணை: சி.பி. ராதாகிருஷ்ணன்

ஜம்மு - காஷ்மீர்: பாதுகாப்புப் படையின் ‘ஆபரேசன் த்ராஷியில்’ ஜெய்ஷ்-ஏ-முகமது தளபதி பலி!

”Vijay அரசியலுக்கு வருவது அவரின் ஜனநாயக உரிமை, ஆனால்..!” இயக்குநர் Raju Murugan!

Sunil Gavaskar அறிவுரையைக் கேட்பாரா Abhishek Sharma? | T20 World Cup Review

மின்சாரத் தேவையைத் தொடர்ந்து நிலக்கரித் தேவை அதிகரிக்கும்!

SCROLL FOR NEXT