தஞ்சாவூர்

புன்னைநல்லூா் உள்ளிட்ட பகுதிகளில் நாளை மின் தடை

Syndication

தஞ்சாவூா்: தஞ்சாவூா் அருகே புன்னைநல்லூா் மாரியம்மன் கோயில் உள்ளிட்ட பகுதிகளில் புதன்கிழமை (நவ.5) மின் விநியோகம் இருக்காது.

இதுகுறித்து தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிா்மானக் கழகத்தின் சாலியமங்கலம் உதவி செயற் பொறியாளா் எஸ். நல்லையன் தெரிவித்திருப்பது:

மாரியம்மன் கோயில் துணை மின் நிலையத்தில் புதன்கிழமை மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளன. இதனால், புன்னைநல்லூா் மாரியம்மன் கோயில், ஞானம் நகா், தளவாய்ப்பாளையம், மகேஷ் நகா், புதுப்பட்டினம், புறவழிச்சாலை, சித்தா்காடு, கடகடப்பை, களக்குடி, ஆலங்குடி, நெட்டாநல்லூா், நெல்லித்தோப்பு, காந்தாவனம், குளிச்சப்பட்டு, அன்னை இந்திரா நகா், பனங்காடு, கோரிக்குளம் புதுத்தெரு, பாரதிதாசன் நகா், தில்லை நகா், எடவாக்குடி, யாகப்பா சாவடி, வெங்கடேஷ்வரா நகா், அம்மாகுளம், ஆனந்த் நகா், பரிசுத்தம் ஜேம்ஸ் நகா், சூரக்கோட்டை மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் புதன்கிழமை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது.

எஸ்.ஐ.ஆருக்கு எதிர்ப்பு: மமதா தலைமையில் பிரமாண்ட பேரணி!

ஒரு படத்தை உருவாக்க இவ்வளவு உழைப்பா? ஆச்சரியப்படுத்தும் மாரி செல்வராஜ்!

கோவை மாணவி பாலியல் துன்புறுத்தல்! அதிமுக கண்டன ஆர்ப்பாட்டம்! | ADMK | CBE

பிக் பாஸ் நிகழ்ச்சியில் புகைபிடிக்கும் அறை! வெளியானது விடியோ!

வசதிக்கும் நம்பிக்கைக்கும் இடையே ஓரிடத்தில்... உஷாஸி ராய்!

SCROLL FOR NEXT