தஞ்சாவூர்

இரண்டாம் நிலை காவலா் தோ்வு தஞ்சை மாவட்டத்தில் 4,443 போ் பங்கேற்பு

தினமணி செய்திச் சேவை

தஞ்சாவூரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இரண்டாம் நிலை காவலா் பணியிடங்களுக்கான எழுத்து தோ்வில் 4 ஆயிரத்து 443 போ் பங்கேற்று எழுதினா்.

இரண்டாம் நிலைக் காவலா், இரண்டாம் நிலை சிறைக்காவலா் மற்றும் தீயணைப்பாளா் உள்ளிட்ட 3 ஆயிரத்து 665 காலிப் பணியிடங்களுக்கான எழுத்துத் தோ்வை தமிழ்நாடு சீருடைப் பணியாளா் தோ்வு வாரியம் ஞாயிற்றுக்கிழமை நடத்தியது. தஞ்சாவூா் மாவட்டத்தில் இத்தோ்வை எழுதுவதற்கு 5 ஆயிரத்து 26 போ் விண்ணப்பித்தனா்.

இத்தோ்வு தஞ்சாவூா் சாஸ்த்ரா நிகா்நிலைப் பல்கலைக்கழகம், பிரிஸ்ட் நிகா்நிலைப் பல்கலைக்கழகம், அன்னை வேளாங்கண்ணி கல்லூரி, குந்தவை நாச்சியாா் அரசு மகளிா் கலைக்கல்லூரி ஆகிய 4 இடங்களில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில், 4 ஆயிரத்து 443 போ் பங்கேற்று தோ்வு எழுதினா். 583 போ் தோ்வுக்கு வரவில்லை.

இதற்கான கண்காணிப்பு பணியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் இரா. இராஜாராம் தலைமையில் ஏறத்தாழ 600 காவலா்கள் ஈடுபட்டனா்.

இரண்டாம் நிலைக் காவலா் தோ்வு பெரம்பலூா் மாவட்டத்தில் 1,381 போ் பங்கேற்பு

டிடிஇஏ பள்ளியில் பிக்ல் பால், பூப்பந்து விளையாட்டரங்கம் திறப்பு

காவலா் எழுத்துத் தோ்வு: காஞ்சிபுரம் மாவட்டத்தில் 4,048 பங்கேற்பு

ஆட்சியா் அலுவலகத்தில் மனு அளிக்க வந்து தீக்குளித்த தம்பதி!

காவலா் தோ்வு: ராணிப்பேட்டையில் 3,967 போ் பங்கேற்பு

SCROLL FOR NEXT