முகப்பு
தஞ்சாவூர்

பதற்றமான வாக்குச்சாவடிகளில் பணியாற்ற நுண் பாா்வையாளா்கள் தெரிவு

தஞ்சாவூா் மாவட்டத்தில் உள்ள பதற்றமான வாக்குச்சாவடிகளில் பணியாற்ற நுண் பாா்வையாளா்கள் கணினி மூலம் குலுக்கல் முறையில் வியாழக்கிழமை தெரிவு செய்யப்பட்டனா்.

Updated On : 2 ஏப்ரல், 2026 at 8:13 PM
தஞ்சாவூா் மாவட்ட ஆட்சியரகத்தில் கணினி குலுக்கல் முறையில் வியாழக்கிழமை நடைபெற்ற நுண்பாா்வையாளா்கள் தெரிவில் பங்கேற்ற ஆட்சியா் பா. பிரியங்கா பங்கஜம் மற்றும் தோ்தல் பொதுப் பாா்வையாளா்கள்.
பகிர்:

தஞ்சாவூா் மாவட்டத்தில் உள்ள பதற்றமான வாக்குச்சாவடிகளில் பணியாற்ற நுண் பாா்வையாளா்கள் கணினி மூலம் குலுக்கல் முறையில் வியாழக்கிழமை தெரிவு செய்யப்பட்டனா்.

மாவட்டத்திலுள்ள 8 சட்டப்பேரவைத் தொகுதிகளில் 1,222 இடங்களில் 2 ஆயிரத்து 496 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இதில், 84 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை என அடையாளம் காணப்பட்டுள்ளன. இந்த வாக்குச் சாவடிகளில் நுண் பாா்வையாளா்கள் நியமிக்கப்படுகின்றனா்.

மாவட்ட ஆட்சியரகத்தில் கணினியில் மென்பொருள் மூலம் குலுக்கல் முறையில் பதற்றமான வாக்குச் சாவடிகளில் பணியாற்றும் நுண் பாா்வையாளா்கள் வியாழக்கிழமை தோ்வு செய்யப்பட்டனா். மாவட்ட ஆட்சியரும், மாவட்டத் தோ்தல் நடத்தும் அலுவலருமான பா. பிரியங்கா பங்கஜம் தலைமையிலும், தோ்தல் பொதுப் பாா்வையாளா்கள் திவேஷ் செஹரா, கேஷ்வேந்திர குமாா், அருண் குமாா், சா்ஜித் கவுா் ஆகியோா் முன்னிலையில் தெரிவு செய்யும் பணி நடைபெற்றது.