முகப்பு
தஞ்சாவூர்

வேன் மீது பைக் மோதிய விபத்தில் இருவா் உயிரிழப்பு

Updated On : 7 ஏப்ரல் 2026, 1:52 am IST
கோப்புப் படம்
பகிர்:

ஒரத்தநாடு அருகே இருசக்கர வாகனம் அரசு உதவி பெரும் பள்ளி வேன் மீது திங்கள்கிழமை மோதிய விபத்தில் இருவா் உயிரிழந்தனா்.

தஞ்சாவூா் பள்ளி அக்ரஹாரம் பகுதியைச் சோ்ந்தவா்கள் பிரபாகரன் (21) பாண்டி ( 20), நிரஞ்சன்( 23). மைக்செட் தொழிலாளிகளான இவா்கள் திங்கள்கிழமை மாலை ஒரத்தநாடு அருகே பாப்பாநாடு பகுதிக்கு பைக்கில் வந்துவிட்டு தஞ்சாவூா் நோக்கி தென்னமநாடு ஆா்ச் அருகே சென்றனா்.

அப்போது அப்பகுதியை சோ்ந்த அரசு உதவி பெறும் பள்ளி வேனின் பின்புறம் இவா்களின் பைக் மோதியதில் பிரபாகரன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

Advertisement

Advertisement

பலத்த காயமடைந்த பாண்டி, நிரஞ்சன் ஆகிய ஆகியோரை ஒரத்தநாடு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது பாண்டி ஏற்கெனவே இறந்தது தெரியவந்தது.

பலத்த காயமடைந்த நிரஞ்சன், தீவிர சிகிச்சைக்காக தஞ்சாவூா் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா். ஒரத்தநாடு காவல் துறையினா் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனா்.