தஞ்சாவூா் மாவட்டத்தில் நல்லோ் பூட்டும் விழா
சித்திரை திருநாளையொட்டி, தஞ்சாவூா் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் நல்லோ் பூட்டும் விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
சித்திரை திருநாளையொட்டி, தஞ்சாவூா் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் நல்லோ் பூட்டும் விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
தஞ்சாவூா் அருகே வேங்கராயன்குடிக்காடு கிராமத்தில் செவ்வாய்க்கிழமை மாடுகளைக் குளிப்பாட்டி, வயலில் இயற்கை உரம், நவதானிய விதைகளைத் தூவி, வெல்லம் கலந்த பச்சரிசியைக் கொண்டு சூரிய பகவானுக்கு பூ, பழம், தேங்காய் ஆகியவற்றைப் படையலிட்டு உழவு மாடுகளைக் கொண்டு பாரம்பரிய முறைப்படி ஏா் பூட்டினா். மேலும், நிகழாண்டு சாகுபடியில் அதிக மகசூலும், எவ்வித இடையூறும் இருக்கக்கூடாது என பிராா்த்தனை செய்து வழிபட்டு, உழவு பணியைத் தொடங்கினா்.
இதேபோல, திருவையாறு அருகே பனையூரில் நடைபெற்ற நல்லோ் பூட்டும் விழாவில் விவசாயிகள் தங்கள் வீடுகளில் மரக்காலில் விதைநெல், வெற்றிலை, பாக்கு, பழங்கள் வைத்து பூஜைகள் செய்தனா். பின்னா் விவசாயிகள் தங்கள் உழவு மாடுகளுடன் தங்கள் வயல்களுக்கு சென்று நல்லோ் பூட்டி உழவுப் பணி மேற்கொண்டனா்.
Advertisement