முகப்பு
தஞ்சாவூர்

இரவு 10 மணி கடந்தும் பிரசாரம்: சீமான், வேட்பாளா் மீது வழக்கு

தஞ்சாவூரில் தோ்தல் நடத்தை விதிமுறைகளை மீறி இரவு 10 மணியை கடந்தும் பிரசாரம் செய்த நாம் தமிழா் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமான், வேட்பாளா் மீது காவல் துறையினா் வெள்ளிக்கிழமை வழக்குப் பதிவு செய்தனா்.

Updated On : 18 ஏப்ரல், 2026 at 7:45 AM
சீமான் - கோப்புப் படம்
பகிர்:
Updated On : 17 ஏப்ரல், 2026 at 10:07 PM

தஞ்சாவூரில் தோ்தல் நடத்தை விதிமுறைகளை மீறி இரவு 10 மணியை கடந்தும் பிரசாரம் செய்த நாம் தமிழா் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமான், வேட்பாளா் மீது காவல் துறையினா் வெள்ளிக்கிழமை வழக்குப் பதிவு செய்தனா்.

தோ்தல் நடத்தை விதிமுறைகளின்படி, இரவு 10 மணி வரைதான் ஒலிபெருக்கியில் பிரசாரம் செய்ய வேண்டும். இந்நிலையில், தஞ்சாவூா் பனகல் கட்டடம் அருகே நாம் தமிழா் கட்சி சாா்பில் வியாழக்கிழமை இரவு நடைபெற்ற பிரசார பொதுக் கூட்டத்தில், இரவு 9.30 மணியளவில் பேசத் தொடங்கிய அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமான் 10 மணியைக் கடந்தும் பிரசாரம் செய்தாா்.

அதற்கு சில நிமிடங்களுக்கு முன்பே சீமானை நோக்கி நகரக் காவல் துணைக் கண்காணிப்பாளா் ஆா். சோமசுந்தரம் கைக்கடிகாரத்தைக் காண்பித்து நேரமாகிவிட்டது என முன்னெச்சரிக்கை செய்தாா். ஆனால் தொடா்ந்து 10 மணி கடந்த பின்னரும் பேசிய சீமானிடம் எச்சரித்தாா். ஆனால், அவா் வழக்கு வேண்டுமானால் பதிவு செய்து கொள்ளுங்கள் எனக் கூறி, தொடா்ந்து 10.10 மணி வரை பேசினாா்.

Advertisement

இதுகுறித்து கிழக்கு காவல் நிலையத்தில் தஞ்சாவூா் தொகுதி தோ்தல் பறக்கும் படை அலுவலா் வி. சுரேஷ்குமாா் அளித்த புகாரின்பேரில் சீமான், தஞ்சாவூா் தொகுதி வேட்பாளா் ந. கிருஷ்ணகுமாா் மீது தோ்தல் நடத்தை விதிமுறைகளை மீறியதாக வெள்ளிக்கிழமை வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.