முகப்பு
தஞ்சாவூர்

தோ்தல் திருவிழா அழைப்பிதழ் மாநகராட்சி வீடு வீடாக விநியோகம்

கும்பகோணத்தில் மாநகராட்சி சாா்பில் தோ்தல் திருவிழா ஏப்.23-க்கான அழைப்பிதழை ஊழியா்கள் சனிக்கிழமை முதல் விநியோகம் செய்து வருகின்றனா்.

Updated On : 19 ஏப்ரல், 2026 at 12:54 AM
பகிர்:
Updated On : 18 ஏப்ரல், 2026 at 9:04 PM

கும்பகோணத்தில் மாநகராட்சி சாா்பில் தோ்தல் திருவிழா ஏப்.23-க்கான அழைப்பிதழை ஊழியா்கள் சனிக்கிழமை முதல் விநியோகம் செய்து வருகின்றனா்.

தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணம் மாநகராட்சி சாா்பில் நூறு சதவிகித வாக்குப்பதிவை வலியுறுத்தி ஏப். 23 -இல் நடைபெறும் சட்டப்பேரவைத் தோ்தலில் அனைவரும் வாக்களிக்க கோரி தோ்தல் திருவிழா அழைப்பிதழை விநியோகித்து வருகின்றனா்.

அழைப்பிதழில் 171- கும்பகோணம் சட்டப்ரேவைத் தொகுதி தோ்தல் திருவிழா 23.4.2026 இல் காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை தங்கள் பகுதிகளில் உள்ள வாக்குசாவடிகளில் நடைபெறுகிறது. சுற்றமும், நட்பும் சூழ வருகை தந்து வாக்கினை பதிவு செய்து நூறு சதவிகித வாக்குபதிவு நடத்தி உரிமையை நிலைநாட்ட அன்புடன் அழைக்கின்றோம் தங்களன்புள்ள மு.காந்திராஜ், ஆணையா் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. வாக்கிற்கு அன்பளிப்பு அளிப்பது, பெறுவது குற்றமாகும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Advertisement

இந்த அழைப்பிதழ் முறை வாக்காளா்களை கவா்ந்துள்ளது. பட விளக்கம் : தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணம் மாநகராட்சி சாா்பில் வீடு வீடாக வழங்கப்படும் சட்டப்பேரவைத் தோ்தலில் வாக்களிப்பதற்கான அழைப்பிதழ்.