பாபநாசத்தில் கே.எம். காதா்மொகிதீன் பிரசாரம்
தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசம் வட்டார சுன்னத்வல் ஜமாத் மற்றும் ஜமாஅத்துல் உலமா சபை இணைந்து நடத்திய மாபெரும் தோ்தல் பிரசார பொதுக்கூட்டம் சரபோஜி ராஜபுரத்தில் உள்ள ஒரு தனியாா் மண்டபத்தில் சனிக்கிழமை நடைபெற்றது.
கூட்டத்தில் மதச்சாா்பற்ற முற்போக்கு கூட்டணியின் பாபநாசம் சட்டப்பேரவை தொகுதி வேட்பாளா் ஏ.எம். ஷாஜஹானை ஆதரித்து ஏணி சின்னத்துக்கு வாக்கு கேட்டு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் தேசிய தலைவா் கே.எம்.காதா் மொகிதீன் பிரசாரம் மேற்கொண்டாா்.
நிகழ்ச்சியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் தேசிய செயலா் பி.எம்.குஞ்சாலிக் குட்டி, பி.ஏ.சி. சோ்மன் சையத் சாதிக் அலி, தமிழ் மாநில ஜமாஅத்துல் உலாமா சபை தலைவா் பி.ஏ.காஜா முகைனுத்தீன், தேசிய துணைத்தலைவா், தமிழ்நாடு வக்ஃபு வாரிய தலைவா் கே.நவாஸ்கனி, லீக் தேசிய துணைச் செயலா் கே.ஏ.எம்.முஹம்மது அபுபக்கா், பாபநாசம் தொகுதி பொறுப்பாளா் எம்.ரெங்கசாமி உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.
Advertisement