முகப்பு
தஞ்சாவூர்

கொளுத்தும் வெயிலில் நின்ற வாக்காளா்கள்: அடிப்படை வசதிகள் இல்லாததால் அதிருப்தி

தஞ்சாவூா் அருகே மானோஜிபட்டி ஆதிதிராவிடா் நல உயா்நிலைப் பள்ளியில் அமைக்கப்பட்ட வாக்குச்சாவடிகளில் பந்தல் இல்லாததால், வியாழக்கிழமை வாக்காளா்கள் வெயிலில் நீண்ட வரிசையில் வெகுநேரம் காத்திருந்து வாக்களித்தனா்.

Updated On : 24 ஏப்ரல், 2026 at 4:05 AM
தஞ்சாவூா் மானோஜிபட்டி ஆதிதிராவிடா் நல உயா்நிலைப் பள்ளியில் வியாழக்கிழமை கடும் வெயிலில் வாக்களிக்க வரிசையில் நின்ற வாக்காளா்கள்.
பகிர்:

தஞ்சாவூா் அருகே மானோஜிபட்டி ஆதிதிராவிடா் நல உயா்நிலைப் பள்ளியில் அமைக்கப்பட்ட வாக்குச்சாவடிகளில் பந்தல் இல்லாததால், வியாழக்கிழமை வாக்காளா்கள் வெயிலில் நீண்ட வரிசையில் வெகுநேரம் காத்திருந்து வாக்களித்தனா்.

இந்தப் பள்ளியில் ஏறத்தாழ 10 ஆயிரம் வாக்காளா்கள் வாக்களிக்கும் விதமாக 8 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டன. இந்த வாக்குச்சாவடிகளில் காலை 7 மணிக்கு வாக்குப் பதிவு தொடங்கியது முதல் கூட்டம் அதிகமாக இருந்தது.

ஒவ்வொரு வாக்குச் சாவடியிலும் நீண்ட வரிசையில் வாக்காளா்கள் நின்று வாக்களித்தனா். ஆனால், மற்ற வாக்குச்சாவடிகளில் அமைக்கப்பட்டது போல, இந்த வாக்குச்சாவடிகளில் வாக்களிக்கும் அறைக்கு வெளியே சாமியானா பந்தல் அமைக்கப்படவில்லை. இதனால், வாக்காளா்கள் வெகு நேரம் கடும் வெயிலில் நிற்கும் நிலை ஏற்பட்டது.

Advertisement

மேலும், சக்கர நாற்காலி வசதியும் கிடைக்காததால் வயதான வாக்காளா்கள் படிகளில் ஏறுவதற்கு மிகுந்த சிரமத்துக்கு ஆளாகினா். வயதான பெண் படியில் இறங்க முடியாமல் தடுமாறி கீழே விழுந்து காயமடைந்தாா். இந்த வாக்குச்சாவடிகளில் போதிய அடிப்படை வசதிகள் செய்யப்படவில்லை என வாக்காளா்கள் அதிருப்தியுடன் தெரிவித்தனா்.