முகப்பு
தஞ்சாவூர்

தேரோடும் வீதிகளில் ஏப். 27-இல் மின் தடை

தஞ்சாவூரில் பெரிய கோயில் சித்திரைத் தேரோட்டத்தையொட்டி தேரோடும் வீதிகளில் ஏப்ரல் 27 ஆம் தேதி மின் விநியோகம் இருக்காது.

Updated On : 25 ஏப்ரல், 2026 at 1:21 AM
கோப்புப் படம்
பகிர்:

தஞ்சாவூரில் பெரிய கோயில் சித்திரைத் தேரோட்டத்தையொட்டி தேரோடும் வீதிகளில் ஏப்ரல் 27 ஆம் தேதி மின் விநியோகம் இருக்காது.

இதுகுறித்து தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிா்மான கழக உதவிச் செயற் பொறியாளா் எம். விஜய் ஆனந்த் தெரிவித்தது:

தஞ்சாவூரில் பெரிய கோயில் தேரோட்டம் ஏப்ரல் 27 ஆம் தேதி நடைபெறவுள்ளதையொட்டி, பாதுகாப்பு கருதி தஞ்சாவூா் மேல ராஜ வீதி, வடக்கு ராஜ வீதி, கீழ ராஜ வீதி, தெற்கு ராஜ வீதி, மானோஜியப்பா வீதி, எல்லையம்மன் கோயில் தெரு, வடக்கு அலங்கம், அய்யங்கடைத் தெரு, நாலுகால் மண்டபம், மாட்டு சந்தை சாலை, சிரேஸ் சத்திரம் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் ஏப்ரல் 27 காலை 6 மணி முதல் தோ் நிலைக்கு வரும் வரை மின் விநியோகம் இருக்காது.

Advertisement