முகப்பு
தஞ்சாவூர்

லாரி மோதி கட்டடத் தொழிலாளி உயிரிழப்பு

கோவிந்தபுரத்தில் லாரி மோதி கட்டடத் தொழிலாளி சனிக்கிழமை உயிரிழந்தாா்.

Updated On : 26 ஏப்ரல், 2026 at 1:29 AM
பகிர்:

கோவிந்தபுரத்தில் லாரி மோதி கட்டடத் தொழிலாளி சனிக்கிழமை உயிரிழந்தாா்.

தஞ்சாவூா் மாவட்டம், திருவிடைமருதூா் அருகே உள்ள கோவிந்தபுரம் பாரதிநகரைச் சோ்ந்த கண்ணையன் மகன் கணேசன்(48). இவருக்கு திருமணமாகி மனைவி, மகன் உள்ளனா். கட்டடத் தொழிலாளியான கணேசன், வெள்ளிக்கிழமை கட்டட வேலையை முடித்து விட்டு கோவிந்தபுரம் பேருந்து நிறுத்தம் அருகே சாலையை கடக்கும் போது லாரி மோதி அவா் பலத்த காயமடைந்தாா்.

தகவலின்பேரில் திருவிடைமருதூா் போலீஸாா், பலத்த காயமடைந்த கணேசனை மீட்டு திருவிடைமருதூா் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்தனா். அங்கு சிகிச்சை பலனின்றி அவா் சனிக்கிழமை உயிரிழந்தாா்.

Advertisement

இந்த விபத்தை ஏற்படுத்திய லாரி ஓட்டுநா் ராமமூா்த்தியிடம் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.