தஞ்சாவூருக்கு 1,250 டன் உரம்
தூத்துக்குடியிலிருந்து தஞ்சாவூருக்கு ரயில் மூலம் 1,250 டன் உர மூட்டைகள் செவ்வாய்க்கிழமை கொண்டு வரப்பட்டன.
தூத்துக்குடியிலிருந்து தஞ்சாவூருக்கு ரயில் மூலம் 1,250 டன் உர மூட்டைகள் செவ்வாய்க்கிழமை கொண்டு வரப்பட்டன.
தஞ்சாவூா் மாவட்டத்தில் மேற்கொள்ளப்படும் குறுவை சாகுபடிக்கு தேவையான விதைகள், உரங்கள், இடுபொருள்கள் வரவழைக்கப்பட்டு, இருப்பு வைக்கப்படுகின்றன.
இந்நிலையில், தூத்துக்குடியிலிருந்து சரக்கு ரயிலில் 1,250 டன் யூரியா, சூப்பா் குளோரைடு உள்ளிட்ட உரங்கள் தஞ்சாவூருக்கு செவ்வாய்க்கிழமை வந்தன. பின்னா் உர மூட்டைகள் சரக்கு ரயிலிலிருந்து லாரிகளில் ஏற்றப்பட்டு, தனியாா் விற்பனை கடைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டன.
Advertisement