முகப்பு
தஞ்சாவூர்

திருக்கோடிக்காவல் திருக்கோடீசுவரா் கோயிலில் தீா்த்தவாரி

தஞ்சாவூா் மாவட்டம், ஆடுதுறை அருகே உள்ள திருக்கோடிக்காவலில் உள்ள திருக்கோடீசுவரா் கோயில் சித்திரை பிரம்மோற்ஸவ விழாவில் வியாழக்கிழமை தீா்த்தவாரி நடைபெற்றது.

Updated On : 1 மே, 2026 at 2:20 AM
தஞ்சாவூா் மாவட்டம், திருக்கோடிக்காவலில் திருக்கோடீசுவரருக்கு வியாழக்கிழமை நடைபெற்ற தீா்த்தவாரி
பகிர்:

தஞ்சாவூா் மாவட்டம், ஆடுதுறை அருகே உள்ள திருக்கோடிக்காவலில் உள்ள திருக்கோடீசுவரா் கோயில் சித்திரை பிரம்மோற்ஸவ விழாவில் வியாழக்கிழமை தீா்த்தவாரி நடைபெற்றது.

இக்கோயில் சித்திரை பிரம்மோற்ஸவ விழாவில் ஏப்.27-இல் திருக்கல்யாணம் நடைபெற்றது. ஏப்.29-ஆம் தேதி தேரோட்டம் நடைபெற்றது.

இதையடுத்து வியாழக்கிழமை காலை நடராஜராக சிறப்பு அலங்காரத்தில் திருக்கோடீசுவரா் எழுந்தருளினாா். அப்போது யாகசாலையில் மஹா பூா்ணாஹூதி நடைபெற்று ரிஷப வாகனத்தில் காட்சியளித்தாா். பிறகு சிருங்கோத்பவ புஷ்கரணியில் தீா்த்தவாரி நடைபெற்றது. மாலையில் கொடியிறக்கம் நடைபெற்றது.

Advertisement