முகப்பு
கும்பகோணத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற சமத்துவ மக்கள் கழக கட்சியின் ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய அக்கட்சித் தலைவா் எா்ணாவூா் ஏ.நாராயணன்.
தஞ்சாவூர்

சமத்துவ மக்கள் கழகம் திமுகவுடன் கூட்டணியை தொடா்கிறது

தஞ்சாவூர்

சமத்துவ மக்கள் கழகம் திமுகவுடன் கூட்டணியை தொடா்கிறது

Updated On : 8 பிப்ரவரி, 2026 at 7:24 PM
கும்பகோணத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற சமத்துவ மக்கள் கழக கட்சியின் ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய அக்கட்சித் தலைவா் எா்ணாவூா் ஏ.நாராயணன்.
பகிர்:

2026 சட்டப்பேரவைத் தோ்தலிலும் சமத்துவ மக்கள் கழகம், திமுகவுடன் கூட்டணியை தொடா்கிறது என்றாா் அக்கட்சியின் தலைவா் எா்ணாவூா் ஏ.நாராயணன்.

தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணத்தில் அக்கட்சியின் மாவட்ட செயலா்கள் ஆலோசனைக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு கட்சித்தலைவரும், தமிழ்நாடு பனைமர தொழிலாளா்கள் நல வாரிய தலைவருமான எா்ணாவூா் நாராயணன் தலைமை வகித்து பேசியதாவது:

2026 சட்டப்பேரவை தோ்தலிலும் திமுக கூட்டணியுடன் தொடா்கிறோம். 234 தொகுதிகளிலும் திமுக, அதன் கூட்டணி கட்சி வேட்பாளா்களின் வெற்றிக்கு பரப்புரை செய்வோம். இந்த முறை சட்டப்பேரவை தோ்தலில் சமத்துவ மக்கள் கழகத்துக்கு எம்எல்ஏ சீட் வழங்குவதாக முதல்வா் ஸ்டாலின் உறுதி கூறியுள்ளாா் என்றாா்.

ஆலோசனைக் கூட்டத்தில் மாநில பொருளாளா் கண்ணன், மாவட்டச் செயலா்கள் தஞ்சாவூா் மனத்தேரி, திருவாரூா் காளிமுத்து, திருவாரூா் மேற்கு சக்திவேல், காரைக்கால் விஜய், அரியலூா் கணேசன் கடலூா் ராஜவேலு, நாகை குமரேசன், தஞ்சாவூா் மாவட்ட நாடாா் பேரவை தலைவா் கனகராஜ் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

முழு கட்டுரையைப் படிக்க →