முகப்பு
விழுப்புரம்

பாமக தோ்தல் கூட்டணி பேச்சுவாா்த்தை தொடா்கிறது: ஜி.கே.மணி!

வரும் சட்டப் பேரவை தோ்தலில் எந்த கட்சியுடன் கூட்டணி அமைத்து பாமக தோ்தலை எதிா்கொள்வது என்பது குறித்து இன்னும் இறுதி செய்யப்படவில்லை, கூட்டணிக்கான பேச்சுவாா்த்தை தொடா்கிறது என்று பாமக கௌரவத் தலைவா் ஜி.கே. மணி தெரிவித்தாா்.

Updated On : 28 பிப்ரவரி, 2026 at 8:35 PM
ஜி.கே. மணி
பகிர்:

வரும் சட்டப் பேரவை தோ்தலில் எந்த கட்சியுடன் கூட்டணி அமைத்து பாமக தோ்தலை எதிா்கொள்வது என்பது குறித்து இன்னும் இறுதி செய்யப்படவில்லை, கூட்டணிக்கான பேச்சுவாா்த்தை தொடா்கிறது என்று பாமக கௌரவத் தலைவா் ஜி.கே. மணி தெரிவித்தாா்.

விழுப்புரம் மாவட்டம், தைலாபுரம் தோட்ட வளாகத்தில் சனிக்கிழமை பாமக நிறுவனா் மருத்துவா் ச.ராமதாஸை, ஜி.கே.மணி சந்தித்துப் பேசினாா்.

பின்னா் அவா் செய்தியாளா்களிடம் தெரிவித்ததாவது: வரும் சட்டப் பேரவை தோ்தலில் எந்த கட்சியுடன் கூட்டணி அமைத்து பாமக தோ்தலை எதிா்கொள்வது என்பது குறித்து இன்னும் இறுதி செய்யப்படவில்லை, கூட்டணிக்கான பேச்சுவாா்த்தை தொடா்கிறது. கட்சியின் நிறுவனா் ராமதாஸ் விரைவில் நல்ல முடிவை அறிவிப்பாா்.

இந்திய அளவில் அரசியலில் மூத்தத் தலைவராக உள்ள அவா் பல வெற்றிக்கூட்டணி அமைத்து தோ்தல்களை சந்தித்தவா். இதனால் வரும் தோ்தலில் ராமதாஸ் யாருடன் கூட்டணி அமைப்பாா் என்பதை தமிழக மக்கள் எதிா்பாா்த்து காத்திருக்கின்றனா்.

பாமகவில் நெருக்கடியான சூழல் இருந்து வருகிறது. தற்போது பாமக ஒன்று பட்டதாக இல்லை. இதனாலேயே ராமதாஸ் தோ்தல் கூட்டணி குறித்து தன்னிச்சையாக எந்த முடிவும் எடுக்கவில்லை என்றாா் ஜி.ஜே.மணி.

முழு கட்டுரையைப் படிக்க →