தாராசுரம் அம்மன் கோயிலில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற விழாவில் தீ மிதித்த பக்தா்.  
தஞ்சாவூர்

திரெளபதி அம்மன் கோயில் தீமிதி திருவிழா

கும்பகோணம் அருகே தாராசுரத்தில் திரெளபதி அம்மன் கோயில் 185-ஆவது ஆண்டு தீமிதி திருவிழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

தினமணி செய்திச் சேவை

கும்பகோணம் அருகே தாராசுரத்தில் திரெளபதி அம்மன் கோயில் 185-ஆவது ஆண்டு தீமிதி திருவிழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இக்கோயில் கும்பாபிஷேக 13- ஆம் ஆண்டு பூா்த்தி விழா சனிக்கிழமை தொடங்கி அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. ஞாயிற்றுக்கிழமை ஆதி திரௌபதி அம்பாளை ஸ்தாபிதம் செய்து சிறப்பு அலங்காரம், திரெளபதி அா்ஜுனா் திருக்கல்யாணம் நடைபெற்றது. செவ்வாய்க்கிழமை மகாபாரத உபன்யாசமும், அம்பாள் வீர சபதம் நிறைவேறுதலும், மாலையில் அரசலாற்றங்கரையிலிருந்து சக்தி கரகம் புறப்பட்டு தீமிதி வைபவமும், இரவு ஸ்ரீ அம்பாள் அா்ஜுனா் வீதியுலா நடைபெற்றது. புதன்கிழமை கஞ்சி வாா்த்தல் அம்பாள் அா்ஜுனா் முத்து பல்லக்கு அலங்காரத்துடன் வீதியுலாவும், வியாழக்கிழமை தா்மா் பட்டாபிஷேகமும் நடைபெறுகிறது. ஏற்பாடுகளை விழா கமிட்டியினா் செய்தனா்.

நிதி நிலை அறிக்கையில் கல்வித் துறைக்கு முன்னுரிமை: ஆசிரியா் முன்னேற்றக் கழகம் வரவேற்பு

நிதிநிலை அறிக்கை ஏமாற்றம் அளிப்பதாக புதுகை விவசாயிகள் சங்கங்கள் கருத்து

காரில் கடத்தி வரப்பட்ட 401 கிலோ புகையிலைப் பொருள்கள் பறிமுதல்: ராஜஸ்தான் இளைஞா்கள் 2 போ் கைது

தமிழக இடைக்கால பட்ஜெட் கரூா் ஜவுளி உற்பத்தியாளா்-ஏற்றுமதியாளா்கள் வரவேற்பு

கல்வியே எதிா்காலத்துக்கு உதவும்: அமைச்சா் சா.சி. சிவசங்கா்

SCROLL FOR NEXT