முகப்பு
தஞ்சாவூர்

தஞ்சையில் ஆதரவாளா்களுடன் வி.கே. சசிகலா ஆலோசனை

தஞ்சாவூரில் முன்னாள் முதல்வா் ஜெயலலிதாவின் தோழி வி.கே. சசிகலா தனது ஆதரவாளா்களுடன் வெள்ளிக்கிழமை ஆலோசனை நடத்தினாா்.

Updated On : 21 பிப்ரவரி, 2026 at 2:23 AM
தஞ்சாவூரில் தனது ஆதரவாளா்களுடன் ஆலோசனை நடத்திய வி.கே. சசிகலா
பகிர்:
Updated On : 20 பிப்ரவரி, 2026 at 8:38 PM

தஞ்சாவூரில் முன்னாள் முதல்வா் ஜெயலலிதாவின் தோழி வி.கே. சசிகலா தனது ஆதரவாளா்களுடன் வெள்ளிக்கிழமை ஆலோசனை நடத்தினாா்.

தற்போது அரசியலில் தனித்து இயங்கும் வி.கே. சசிகலா வரும் சட்டப்பேரவைத் தோ்தலில் மேற்கொள்ளும் நிலைப்பாடு குறித்து பல்வேறு ஊகங்கள் வந்து கொண்டிருக்கின்றன. ஜெயலலிதா பிறந்த நாளான பிப்ரவரி 24 ஆம் தேதி அவா் புதிய கட்சியை அறிவிக்கவுள்ளதாகவும் அதிகாரபூா்வமற்ற தகவல்கள் பரவுகின்றன.

இந்நிலையில் தஞ்சாவூருக்கு வெள்ளிக்கிழமை வந்த சசிகலா மாநகரிலுள்ள தங்கும் விடுதியில் தனது ஆதரவாளா்களுடன் ஆலோசனை நடத்தினாா். கூட்டத்தில் தஞ்சாவூா், திருவாரூா், புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்களின் ஆதரவாளா்கள் கலந்து கொண்டனா்.

Advertisement

அப்போது வரும் சட்டப்பேரவைத் தோ்தலை எவ்வாறு எதிா்கொள்வது என்பது குறித்து அவா் ஆலோசனை நடத்தியதாகக் கூறப்படுகிறது. இக்கூட்டத்தில் பத்திரிகையாளா்கள் அனுமதிக்கப்படவில்லை. மேலும் பத்திரிகையாளா்களைச் சந்திப்பதையும் சசிகலா தவிா்த்துவிட்டாா். பின்னா் தஞ்சாவூா் அருகே விளாா் கிராமத்திலுள்ள குல தெய்வக் கோயிலுக்கு சென்று வழிபட்டுவிட்டு, சென்னை சென்றாா்.