ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி
சசிகலா, பாமக நிறுவனர் ராமதாஸ் இணைந்து, தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடப் போவதாக அறிவித்துள்ளனர்.
சசிகலா, பாமக நிறுவனர் ராமதாஸ் இணைந்து, தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடப் போவதாக அறிவித்துள்ளனர்.
விழுப்புரம், தைலாபுரத்தில் உள்ள பாமக நிறுவனர் ராமதாஸ் இல்லத்தில் அவரை சசிகலா வெள்ளிக்கிழமை சந்தித்துப் பேசினார். அப்போது வரும் பேரவைத் தேர்தலை கூட்டணி அமைத்து சந்திப்பது என இருவரும் முடிவு செய்து அதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.
பின்னர் இருவரும் அதுதொடர்பான கூட்டறிக்கையையும் வெளியிட்டுள்ளனர். அதில், “அனைத்திந்திய புரட்சித்தலைவர் மக்கள் முன்னேற்றக் கழகம் மற்றும் பாட்டாளி மக்கள் கட்சி வரும் சட்டமன்ற தேர்தலில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மாநிலங்களில் இணைந்து கூட்டணி அமைக்கிறது.
தமிழகத்தின் துரோக அடையாளங்களை களைந்து மக்கள் நலனையும், தமிழகத்தின் சுயமரியாதை மற்றும் தன்னாட்சி மேம்படுத்தும் விதமாக இந்த கூட்டணி செயல்படும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே தமிழ்கத்தில் நான்கு முனைப் போட்டி நிலவி வரும் நிலையில் தற்போது ராமதாஸ் – சசிகலா புதிய கூட்டணி அமைத்துள்ளனர்.
ஜெயலலிதாவின் தோழியான சசிகலா சமீபத்தில், அனைத்திந்திய புரட்சித்தலைவர் மக்கள் முன்னேற்றக் கழகம் எனும் கட்சியை தொடங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.