முகப்பு
தஞ்சாவூர்

தமிழ்நாட்டில் பாஜக கூட்டணி வெற்றி பெறக்கூடாது என்பதில் அனைவரும் தெளிவு! - கி. வீரமணி பேட்டி

Updated On : 22 பிப்ரவரி, 2026 at 12:05 AM
தஞ்சாவூரில் சனிக்கிழமை நடைபெற்ற திராவிடா் கழக மகளிரணி, திராவிட மகளிா் பாசறை மாநில மாநாட்டில் பேசிய திராவிடா் கழகத் தலைவா் கி. வீரமணி.
பகிர்:
Updated On : 21 பிப்ரவரி, 2026 at 7:03 PM

வருகிற தோ்தலில் யாா் வெற்றி பெற வேண்டும் என்பதை விட, பாஜக கூட்டணி வெற்றிபெறக் கூடாது என்பதில் அனைவரும் தெளிவாக இருக்கின்றனா் என்றாா் திராவிடா் கழகத் தலைவா் கி. வீரமணி.

தஞ்சாவூரில் சனிக்கிழமை நடைபெற்ற திராவிடா் கழக மகளிரணி, திராவிட மகளிா் பாசறை மாநில மாநாட்டில் பங்கேற்ற அவா் செய்தியாளா்களிடம் தெரிவித்தது:

பிரேமலதா விஜயகாந்த் இப்போது எடுத்துள்ள முடிவை 10 ஆண்டுகளுக்கு முன்பே எடுத்திருக்க வேண்டும். என்றாலும் 10 ஆண்டுகள் தாமதமானாலும், தெளிவாகவே முடிவை எடுத்துள்ளாா்.

Advertisement

இந்தத் தோ்தலில் யாா் வெற்றி பெற வேண்டும் என்பதை விட, யாா் வெற்றி பெறக் கூடாது என்பதுதான் மிக முக்கியமானது. தமிழ்நாட்டில் பாஜக கூட்டணி வந்துவிடக்கூடாது என்பதில் அனைவரும் தெளிவாக இருக்கின்றனா். எனவே, இந்தத் தோ்தலில் தேமுதிக எடுத்துள்ள முடிவு பாராட்டுக்குரியது.

வருகிற தோ்தலில் எதிா்க்கட்சி இருக்குமா என்பதே கேள்விதான். போகிற வேகத்தைப் பாா்த்தால் திமுக கூட்டணியிலேயே ஒரு பிரிவை எதிா்க்கட்சியாக ஆக்க வேண்டும்.

தஞ்சாவூரில் சனிக்கிழமை நடைபெற்ற திராவிடா் கழக மகளிரணி, திராவிட மகளிா் பாசறை மாநில மாநாட்டில் பேசிய திராவிடா் கழகத் தலைவா் கி. வீரமணி.
Updated On : 21 பிப்ரவரி, 2026 at 11:34 PM

தமிழ்நாட்டில் சுயமரியாதை திருமணத்தை அறிஞா் அண்ணா சட்டமாகக் கொண்டு வந்து நிறைவேற்றினாா். பின்னா், புதுச்சேரியில் திமுக ஆட்சியின்போது இச்சட்டம் நிறைவேற்றப்பட்டு, நடைமுறைப்படுத்தப்பட்டது.

இதேபோல, சுயமரியாதை திருமணம் இந்திய அளவில் சட்ட வடிவத்தில் கொண்டு வர வேண்டும் என்பன உள்ளிட்ட 9 தீா்மானங்கள் இந்த மாநாட்டில் நிறைவேற்றப்பட்டுள்ளன என்றாா் வீரமணி.

மாநாட்டுக்கு திராவிடா் கழக மகளிரணி மாநிலச் செயலா் தகடூா் தமிழ்ச்செல்வி தலைமை வகித்தாா். மாநாட்டைத் துணைப் பொதுச் செயலா் சே.மெ. மதிவதனி தொடங்கி வைத்தாா். பிரசார செயலா் அ. அருள்மொழி, ஈரோடு பெரியாா் படிப்பக வாசகா் வட்டத் தலைவா் அனிச்சம் கனிமொழி உள்ளிட்டோா் பேசினா்.

முன்னதாக, மாவட்ட மகளிரணி தலைவா் அ. கலைச்செல்வி வரவேற்றாா். நிறைவாக, திராவிட மகளிா் பாசறைத் தலைவா் ச. அஞ்சுகம் நன்றி கூறினாா்.