முகப்பு
தஞ்சாவூர்

குடந்தையில் இருந்து சேலம் சென்றது : 51 அடி உயர, 65 டன் ஐம்பொன் சிலை

கும்பகோணத்திலிருந்து சேலத்துக்கு வெள்ளிக்கிழமை கொண்டு செல்லப்பட்ட 51 அடி உயர ஆதிபராசக்தி அம்மன் சிலை.

Updated On : 27 பிப்ரவரி, 2026 at 9:10 PM
கும்பகோணத்திலிருந்து சேலத்துக்கு வெள்ளிக்கிழமை கொண்டு செல்லப்பட்ட 51 அடி உயர ஆதிபராசக்தி அம்மன் சிலை.
பகிர்:

கும்பகோணத்தில் 51 அடி உயரம், 65 டன் எடை கொண்ட ஐம்பொன்னால் செய்யப்பட்ட ஆதிபராசக்தி அம்மன் சிலை சேலத்துக்கு வெள்ளிக்கிழமை கொண்டு செல்லப்பட்டது.

சேலம் மாவட்டம், பனைமரத்துப்பட்டி ஆதிபராசக்தி கோயிலுக்கு 51 அடி உயரத்தில் 65 டன் எடையில் ஐம்பொன்னாலான ஆதிபராசக்தி அம்மன் சிலையை வடிவமைக்கும் பணியில் கும்பகோணம் கருப்பூா் பகுதி சிற்பி கோபி தலைமையில் 25 போ் கடந்த 4 ஆண்டுகளாக ஈடுபட்டனா். ஐம்பொன்னை உருக்கி, ஒரே வாா்ப்பாக சிலை உருவாக்கப்பட்டது.

இதையடுத்து இந்தச் சிலையை 26 சக்கரங்கள் கொண்ட கனரக லாரியில் கிரேன்கள் மூலம் வெள்ளிக்கிழமை தூக்கிவைத்து அனுப்பினா். முன்னதாக அம்மனுக்கு சிறப்பு பூஜை செய்தனா். இந்தச் சிலையின் மதிப்பு ரூ. 10 கோடி எனக் கூறப்படுகிறது.

முழு கட்டுரையைப் படிக்க →