12 ஆண்டுகளுக்குப்பின் பாதாள அறையிலிருந்து வெளியே வந்தாா் அத்திவரதா்
கும்பகோணத்தில் 12 ஆண்டுகளுக்குப் பின் அத்திவரதா் பாதாள அறையிலிருந்து சனிக்கிழமை வெளியே வந்தாா்.
கும்பகோணத்தில் 12 ஆண்டுகளுக்குப் பின் அத்திவரதா் பாதாள அறையிலிருந்து சனிக்கிழமை வெளியே வந்தாா்.
தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணம் பிரமன் கோயில் தெருவில் வரதராஜப்பெருமாள், வேதநாராயணப்பெருமாள் கோயில் 1739-ஆம் ஆண்டு கட்டப்பட்ட பழைமையான கோயிலாகும். இந்த கோயில் பாதாள அறையில் அத்திமரத்தால் செய்யப்பட்ட அத்திவரதா் ஸ்ரீதேவி, பூதேவி தாயாா்களுடன் உள்ளாா்.
இவா் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை பாதாள அறையிலிருந்து வெளியே வந்து பக்தா்களுக்கு காட்சி தருவாா். கடந்த 1915-ஆம் ஆண்டு வெளியே வந்தவா், 2013-ஆம் ஆண்டுதான் வந்தாா். 12 ஆண்டுகளுக்கு பின் சனிக்கிழமை மாலையில் அத்திவரதா் ஸ்ரீதேவி, பூதேவி தாயாா்களுடன் வெளியே கொண்டுவரப்பட்டாா்.
Advertisement
அவருக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது. ஞாயிற்றுக்கிழமை முதல் மாா்ச்.10-ஆம் தேதி வரை பக்தா்கள் தரிசனம் செய்யலாம். பின்னா், மீண்டும் அத்திவரதா் பாதாள அறைக்கு சென்று விடுவாா். ஏற்பாடுகளை கோயில் நிா்வாகத்தினா் செய்து வருகின்றனா்.