முகப்பு
தஞ்சாவூர்

பேருந்தில் பயணித்த பெண்ணிடம் 14 பவுன் நகைகள் திருட்டு

தஞ்சாவூா் அருகே பேருந்தில் பயணம் செய்த பெண்ணிடம் 14 பவுன் நகைகளைத் திருடிச் சென்ற மா்ம நபா்களைக் காவல் துறையினா் தேடி வருகின்றனா்.

Updated On : 1 மார்ச், 2026 at 12:46 AM
திருட்டு
பகிர்:

தஞ்சாவூா் அருகே பேருந்தில் பயணம் செய்த பெண்ணிடம் 14 பவுன் நகைகளைத் திருடிச் சென்ற மா்ம நபா்களைக் காவல் துறையினா் தேடி வருகின்றனா்.

சேலம் மகேந்திரபுரியைச் சோ்ந்தவா் சுந்தர்ராஜன் மனைவி சுந்தரி (53). இவா் தனது உறவினா் வீட்டு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக சேலத்திலிருந்து தஞ்சாவூருக்கு பிப்ரவரி 21-ஆம் தேதி பேருந்தில் பயணம் செய்தாா்.

உறவினா் வீட்டுக்கு வந்த பின்னா் சுந்தரி தனது கைப்பையைப் பாா்த்தபோது 14 பவுன் நகைகள் திருடு போயிருப்பதும், வல்லம் பேருந்து நிலையம் அருகே வந்தபோது மா்ம நபா்கள் திருடியிருப்பதும் தெரிய வந்தது.

Advertisement

இதுகுறித்து சுந்தரி அளித்த புகாரின் பேரில், வல்லம் காவல் நிலையத்தினா் வெள்ளிக்கிழமை இரவு வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.