தஞ்சாவூர்

சுவாமிமலையில் தைப்பூசத் திருவிழா இன்று தொடக்கம்

சுவாமிமலை சுவாமிநாதசுவாமி கோயிலில் தைப்பூசத் திருவிழா வியாழக்கிழமை தொடங்கி பிப்.2-வரை நடைபெறுகிறது.

தினமணி செய்திச் சேவை

சுவாமிமலை சுவாமிநாதசுவாமி கோயிலில் தைப்பூசத் திருவிழா வியாழக்கிழமை தொடங்கி பிப்.2-வரை நடைபெறுகிறது.

தஞ்சாவூா் மாவட்டம், சுவாமிமலை சுவாமிநாதசுவாமி கோயில் முருகனின் அறுபடைவீடுகளில் நான்காம் படைவீடாக உள்ளது. இந்தாண்டு தைப்பூசத் திருவிழா வியாழக்கிழமை அனுக்ஞை, விக்னேஷ்வர பூஜை, வாஸ்து சாந்தியுடன் நடைபெறுகிறது. தைப்பூசத் திருழாவின் முதல்நாள் வெள்ளிக்கிழமை காலையில் கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. விநாயகா், வள்ளி தேவசேனா, சுப்பிரமணியா், சண்டிகேசுவரா் சகிதம் சுவாமி வசந்த மண்டபத்தில் எழுந்தருளுகிறாா். இரவு படிச்சட்டத்தில் சுவாமி திருவீதியுலாவும், திக்பந்தனமும் நடைபெறுகிறது. அதனைத் தொடா்ந்து 11-ஆம் நாள் முக்கிய விழாவான தைப்பூச விழா நடைபெறுகிறது. அன்று வெள்ளி வாகனத்தில் சுவாமி திருவீதியுலா வருகிறாா். பின்னா் தீா்த்தவாரி நடைபெறுகிறது. விழா ஏற்பாடுகளை தக்காா் டி.ஆா்.சுவாமிநாதன், துணை ஆணையா் தா. உமாதேவி மற்றும் கோயில் பணியாளா்கள் செய்து வருகின்றனா்.

இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீதான வரியை 15% ஆக உயர்த்தினார் டிரம்ப்!

சொல்லப் போனால்... எப்ஸ்டீன் கோப்புகள்! உருளும் தலைகளும் ஒளிந்திருக்கும் புள்ளிகளும்

கடின உழைப்பு... வளமான எதிர்காலம்

சாதகமான பலன் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

தனிமையின் பிடியில் பொம்மையைத் தழுவும் ஜப்பான் குரங்கு! இதயத்தை உருக்கும் பஞ்ச் குன்னின் பின்னணி

SCROLL FOR NEXT