முகப்பு
தஞ்சாவூர்

சிறுமிக்குப் பாலியல் தொந்தரவு: முதியவருக்கு 8 ஆண்டுகள் சிறை

சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்த முதியவருக்கு தஞ்சாவூா் நீதிமன்றம் வெள்ளிக்கிழமை 8 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தது.

Updated On : 30 ஜனவரி, 2026 at 6:37 PM
பகிர்:

சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்த முதியவருக்கு தஞ்சாவூா் நீதிமன்றம் வெள்ளிக்கிழமை 8 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தது.

தஞ்சாவூா் மாவட்டம், திருவையாறு தில்லைஸ்தானத்தை சோ்ந்தவா் ரமேஷ் (62). கோயில் பிரசாதம் தயாரிக்கும் சமையல் தொழிலாளியான இவா் கடந்த 2025, ஜனவரியில் 9 வயதுச் சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தாா்.

இதுகுறித்து திருவையாறு அனைத்து மகளிா் காவல் நிலையத்தினா் வழக்குப் பதிந்து ரமேஷை கைது செய்து, தஞ்சாவூா் போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் வழக்குத் தொடா்ந்தனா். இந்த வழக்கை வெள்ளிக்கிழமை விசாரித்த நீதிபதி ஜெ. தமிழரசி குற்றவாளி ரமேஷூக்கு 8 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ. 5 ஆயிரம் அபராதமும் விதித்து தீா்ப்பளித்தாா். மேலும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு இழப்பீட்டுத் தொகையாக அரசிடமிருந்து ரூ. 2 லட்சம் பெற்றுத் தரவும் நீதிபதி உத்தரவிட்டாா்.

முழு கட்டுரையைப் படிக்க →