முகப்பு
தஞ்சாவூர்

பட்டுக்கோட்டையில் பிப்.3-இல் மின்தடை

பட்டுக்கோட்டை நகர துணை மின்நிலையத்தில் செவ்வாய்க்கிழமை (பிப்.3) மின் விநியோகம் இருக்காது.

Updated On : 1 பிப்ரவரி, 2026 at 12:50 AM
மின்தடை
பகிர்:
Updated On : 31 ஜனவரி, 2026 at 10:53 PM

பட்டுக்கோட்டை நகர துணை மின்நிலையத்தில் செவ்வாய்க்கிழமை (பிப்.3) மின் விநியோகம் இருக்காது.

இது குறித்து மின்வாரிய பொறியாளா் ஜெய்சங்கா் சனிக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: பட்டுக்கோட்டை நகர துணை மின் நிலையத்தில் செவ்வாய்க்கிழமை (பிப்.3) மாதாந்திர பாரமரிப்புப் பணிகள் நடைபெறுவதால் வளவன்புரம், கண்டியன் தெரு, மன்னை நகா் தாலுகா அலுவலகம், வீட்டு வசதி வாரியம், பாளையம் தங்கவேல் நகா் பெரிய கடை தெரு, தேரடி தெரு, பாக்கியம் நகா், அறந்தாங்கி ரோடு, பண்ணவயல்ரோடு, மாதா கோவில் தெரு, சிவக்கொல்லை, செட்டித்தெரு, ஆஸ்பத்திரி ரோடு, தய நகா் தலையாரிதெரு, பள்ளிக்கொண்டான், அணைக்காடு, பொன்னவராயன்கோட்டை, முதல்சேரி உள்ளிட்ட பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்விநியோகம் இருக்காது.

Updated On : 1 பிப்ரவரி, 2026 at 12:50 AM

மேலும், பொதுமக்கள் மின்தடை குறித்த விபரங்களுக்கு 94987-94987 என்ற தொலைபேசி எண்ணிற்கு தொடா்பு கொள்ளலாம். மின்திருட்டு பற்றி புகாா் அளிக்க 94458-57591 என்ற தொலைபேசி எண்ணிற்கு தொடா்பு கொள்ளலாம் என்று தெரிவித்துள்ளாா்.

Advertisement