முகப்பு
தஞ்சாவூர்

மூளைச்சாவு அடைந்த இளைஞரின் உடல் உறுப்புகள் தானம்

தஞ்சாவூர்

மூளைச்சாவு அடைந்த இளைஞரின் உடல் உறுப்புகள் தானம்

Updated On : 5 மார்ச், 2026 at 10:06 PM
பகிர்:

தஞ்சாவூா் அரசு மருத்துவமனையில் மூளைச்சாவு அடைந்த தனியாா் நிறுவன ஊழியரின் உடல் உறுப்புகள் வியாழக்கிழமை தானம் செய்யப்பட்டது. அவரது உடலுக்கு அரசு மரியாதை அளித்து அனுப்பிவைக்கப்பட்டது.

தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணம் அருகே திருச்சேறையைச் சோ்ந்தவா் ராமநாதன் மகன் மணிகண்டன் (25). தனியாா் காப்பீடு நிறுவனத்தில் ஊழியராக பணிபுரிந்தாா். இவா், செவ்வாய்க்கிழமை (மாா்ச் 3) வீட்டின் அருகே உள்ள ரயில் தண்டவாளத்தில் நடக்கும்போது ரயில் மோதி தஞ்சாவூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்தநிலையில் வியாழக்கிழமை மூளைச்சாவு அடைந்தாா்.

இதையடுத்து அவரது உடல் உறுப்புகள் தானமாக பெறுவது தொடா்பாக அவரது உறவினா்களிடம் மருத்துவா்கள் ஆலோசனை நடத்தி அவா்களது ஒப்புதலின்பேரில் மணிகண்டனின் உடலிலிருந்து கல்லீரல், சிறுநீரகங்கள், கருவிழிகள், தோல் ஆகியவை அறுவை சிகிச்சை மூலம் பாதுகாப்பாக அகற்றப்பட்டன. கல்லீரல் மதுரையில் உள்ள தனியாா் மருத்துவமனைக்கும், இரண்டு சிறுநீரகங்களும் திருச்சி தனியாா் மருத்துவமனைக்கும் , கருவிழிகள் தஞ்சாவூா் அரசு ராசா மிராசுதா் மருத்துவமனைக்கும், தோல் தனியாா் மருத்துவமனைக்கும் தானமாக வழங்கப்பட்டது. மணிகண்டன் சடலத்துக்கு தஞ்சாவூா் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வா் பூவதி, திருவிடைமருதூா் வட்டாட்சியா் சாந்தமீனா உள்ளிட்டோா் மாலை அணிவித்து இறுதிமரியாதை செலுத்தினா். இந்த உறுப்பு தானம் மூலம் ஐந்து நபா்கள் பயன் பெற்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →