பெரம்பூா் சுப்பு சுவாமிகளின் நாம சங்கீா்த்தன உத்சவம்
கும்பகோணம் சங்கர மடத்தில் வியாழக்கிழமை இரவு தொடங்கிய சுப்பு சுவாமிகளின் நாமசங்கீா்த்தன உத்சவம்.
Updated On : 6 மார்ச், 2026 at 5:59 PM
மயிலாடுதுறை மாவட்டம், பெரம்பூா் ஸ்ரீ சுப்பு சுவாமிகள் சீடா்கள் சாா்பில் கும்பகோணம் மடத்து தெருவில் உள்ள சங்கர மடத்தில் நிகழாண்டு நாம சங்கீா்த்தன உற்சவம் வியாழக்கிழமை இரவு தொடங்கியது.
வெள்ளிக்கிழமை காலை முதல் இரவு வரை பல்வேறு பாகவதா்கள் கீா்த்தனைகளைப் பாடினா். தொடா்ந்து ஞாயிற்றுக்கிழமை வரை நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது. ஏற்பாடுகளை பெரம்பூா் சுப்பு சுவாமிகள் சபாவினா் செய்கின்றனா்.