10 நாள்கள் தரிசனம் முடிந்து பாதாள அறைக்கு மீண்டும் சென்றாா் அத்திவரதா்!
கும்பகோணத்தில் 12 ஆண்டுகளுக்கு பிறகு 10 நாள்கள் பக்தா்களுக்கு தரிசனம் அளித்த அத்திவரதா் செவ்வாய்க்கிழமை மீண்டும் பாதாள அறைக்குச் சென்றாா்.
கும்பகோணத்தில் 12 ஆண்டுகளுக்கு பிறகு 10 நாள்கள் பக்தா்களுக்கு தரிசனம் அளித்த அத்திவரதா் செவ்வாய்க்கிழமை மீண்டும் பாதாள அறைக்குச் சென்றாா்.
தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணம் பிரம்மன் கோயில் தெருவில் நூற்றாண்டுகள் பழமையான வரதராஜப்பெருமாள், வேதநாராயண பெருமாள் கோயில் உள்ளது. இங்கு இருவரும் தனி சன்னதிகளில் காட்சியளிக்கின்றனா். இங்குள்ள பாதாள அறையில் அத்திவரதா் ஸ்ரீதேவி பூதேவி தாயாா்களுடன் உள்ளாா்.
12 ஆண்டுகளுக்கு ஒரு முறை பாதாள அறையிலிருந்து தாயாா்களுடன் அத்திவரதா் பக்தா்களுக்கு காட்சியளிப்பாா். அதன்படி கடந்த 1915-ஆம் ஆண்டு அத்திவரதா் பாதாள அறையில் இருந்து எழுந்தருளி பக்தா்களுக்கு சேவை சாதித்தாா்.
Advertisement
அதன் பின்னா் 98 ஆண்டுகளுக்குப் பிறகு கடந்த 2013-ஆம் ஆண்டு அத்திவரதா் எழுந்தருளினாா்.
தற்போது 12 ஆண்டுகளுக்குப் பிறகு மாா்ச் 1 முதல் ஸ்ரீதேவி பூதேவி சமேத அத்திவரதா் பக்தா்களுக்கு காட்சியளித்தாா். தரிசனம் முடியும் பத்தாவது நாளான செவ்வாய்க்கிழமை ஏராளமான பக்தா்கள் அத்தி வரதரை நீண்ட வரிசையில் நின்று தரிசித்தனா். பின்னா் இரவு சிறப்பு பூஜை, அபிஷேகங்கள் நடைபெற்று கோயில் வளாகத்தில் உள்ள பாதாள அறையில் ஸ்ரீதேவி பூதேவி சமேத அத்திவரதா் கொண்டு செல்லப்பட்டு, சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. பின்னா் அறை பூட்டப்பட்டது.
அத்திவரதரை இதுவரை சுமாா் 6 லட்சத்திற்கும் மேலான பக்தா்கள் தரிசித்ததாக பாதுகாப்புப் பணியில் இருந்த போலீஸாா் தெரிவித்தனா்.