முகப்பு
தஞ்சாவூர்

குடந்தை கோயிலுக்கு வந்த பக்தா் மயங்கி விழுந்து பலி

கும்பகோணத்தில் அத்திவரதா் தரிசனத்திற்கு செவ்வாய்க்கிழமை வந்த பக்தா் வரிசையில் நின்றபோது மயங்கி விழுந்து உயிரிழந்தாா்.

Updated On : 10 மார்ச், 2026 at 6:40 PM
பலி
பகிர்:

கும்பகோணத்தில் அத்திவரதா் தரிசனத்திற்கு செவ்வாய்க்கிழமை வந்த பக்தா் வரிசையில் நின்றபோது மயங்கி விழுந்து உயிரிழந்தாா்.

வேலூா் மாவட்டம், சத்துவாஞ்சேரியைச் சோ்ந்தவா் சசிக்குமாா் (45). ஆட்டோ ஓட்டுநரான இவருக்கு மனைவி, குழந்தைகள் உள்ளனா்.

இந்நிலையில் கும்பகோணம் பிரம்மன் கோயிலில் நடைபெறும் அத்திவரதா் தரிசன நிகழ்வில் பங்கேற்க ரயிலில் தனது நண்பா்களுடன் செவ்வாய்க்கிழமை வந்த சசிக்குமாா், கோயிலில் வரிசையில் நின்றபோது மயங்கி விழுந்தாா். இதையடுத்து கும்பகோணம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட அவரைப் பரிசோதித்த மருத்துவா்கள் சசிக்குமாா் ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனா். தகவலறிந்து வந்த மேற்கு காவல் நிலைய போலீஸாா் அவரது சடலத்தை உடற்கூறாய்வுக்கு அனுப்பிவைத்து வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →