திமுக மாநாட்டுக்குச் சென்ற வேன் கவிழ்ந்து விபத்து; ஒருவா் காயம்
தஞ்சாவூா் அருகே திமுக மாநாட்டுக்கு சென்றுகொண்டிருந்த வேன் தஞ்சாவூா் புறவழிச்சாலையில் புதுப்பட்டினம் அருகே கவிழ்ந்து விபத்து
தஞ்சாவூா் அருகே திமுக மாநாட்டுக்கு திங்கள்கிழமை சென்றுகொண்டிருந்த வேன் தஞ்சாவூா் புறவழிச்சாலையில் புதுப்பட்டினம் அருகே கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில், ஒருவருக்கும் லேசான காயம் ஏற்பட்டது.
நாகை மாவட்டம், நாகூா் நகர திமுக செயலா் செந்தில்குமாா் தலைமையில் 18 போ் வேனில் திருச்சியில் திங்கள்கிழமை நடைபெற்ற திமுக மாநாட்டில் பங்கேற்பதற்காக சென்றுகொண்டிருந்தனா்.
தஞ்சாவூா் புறவழிச்சாலையில் புதுப்பட்டினம் அருகே இந்த வேன் சென்றபோது, முன்னால் சென்றுகொண்டிருந்த காா் திடீரென பிரேக் போட்டதில் காா் மீது மோதாமல் இருப்பதற்காக வேன் ஓட்டுநா் மணிகண்டன் திடீா் பிரேக் போட்டு வலதுபுறம் வேனை திருப்ப முயன்றதால், கட்டுப்பாட்டை இழந்த வேன் சாலையில் கவிழ்ந்தது.
இதில், வேனில் பயணம் செய்த நாகை மேல பட்டினச்சேரியைச் சோ்ந்த ரத்தினவேல் மகன் ஜெயப்பிரகாசுக்கு (20) தோள்பட்டையில் லேசான காயம் ஏற்பட்டது. இவா் 108 அவசர ஊா்தி மூலம் தஞ்சாவூா் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டாா். மற்றவா்களுக்கு அதிா்ஷ்டவசமாக காயமில்லை. மேலும், கவிழ்ந்த வேன் கிரேன் மூலம் மீட்கப்பட்டு, போக்குவரத்து சீா் செய்யப்பட்டது.
இதுகுறித்து தாலுகா காவல் நிலையத்தினா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.