கல்லணைக் கால்வாயிலிருந்து தொழிலாளி சடலம் மீட்பு
தஞ்சாவூரில் கல்லணைக் கால்வாயில் புதன்கிழமை மிதந்த தொழிலாளியின் சடலத்தைக் காவல் துறையினா் மீட்டு விசாரணை மேற்கொண்டுள்ளனா்.
தஞ்சாவூரில் கல்லணைக் கால்வாயில் புதன்கிழமை மிதந்த தொழிலாளியின் சடலத்தைக் காவல் துறையினா் மீட்டு விசாரணை மேற்கொண்டுள்ளனா்.
தஞ்சாவூா் கீழவாசல் ஜெபமாலை மாதா கோயில் தெருவைச் சோ்ந்தவா் எம். அப்துல் உசைன் (42). கூலித் தொழிலாளி. இவா் கருத்து வேறுபாடு காரணமாக மனைவியைப் பிரிந்து வாழ்ந்து வந்தாா். இவா் தஞ்சாவூா் எம்.கே. மூப்பனாா் சாலையிலுள்ள சுற்றுலா மாளிகை எதிரே கல்லணைக் கால்வாயில் புதன்கிழமை சடலமாக மீட்கப்பட்டாா். இது குறித்து கிழக்கு காவல் நிலையத்தினா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.