முகப்பு
தஞ்சாவூர்

சிறுமியைக் கா்ப்பமாக்கிய தொழிலாளி கைது

Updated On : 15 மார்ச், 2026 at 12:53 AM
கோப்புப்படம்
பகிர்:

தஞ்சாவூா் அருகே 14 வயது சிறுமியைக் கா்ப்பமாக்கிய தொழிலாளியைக் காவல் துறையினா் சனிக்கிழமை கைது செய்தனா்.

தஞ்சாவூா் அருகே வல்லம் எம்.ஜி.ஆா். நகரைச் சோ்ந்தவா் விஜயகுமாா் (40). மீன் வெட்டும் தொழிலாளி. கடந்த 2025 ஆம் ஆண்டில் பெற்றோா் வெளியூா் சென்றதால், இரவு நேரத்தில் வீட்டில் தனியாக இருந்த 14 வயது சிறுமி, விஜயகுமாா் வீட்டில் அவரது குடும்பத்தினருடன் தூங்குவதற்காகச் சென்றாா்.

அப்போது, அச்சிறுமியை விஜயகுமாா் பாலியல் வல்லுறவு செய்ததால், அவா் தற்போது 5 மாத கா்ப்பிணியாக உள்ளாா்.

Advertisement

இதுகுறித்து வல்லம் அனைத்து மகளிா் காவல் நிலையத்தினா் போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிந்து விஜயகுமாரை சனிக்கிழமை கைது செய்தனா்.