மாணவிக்கு பாலியல் தொல்லை மருத்துவமனை ஊழியா் கைது
தஞ்சாவூா் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக மருத்துவமனை ஊழியரை காவல் துறையினா் சனிக்கிழமை கைது செய்தனா்.
தஞ்சாவூா் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையிலுள்ள அறுவை சிகிச்சை அரங்கத்தில் புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடியைச் சோ்ந்த மனோஜ்குமாா் (23) தொழில்நுட்பநராக பணியாற்றி வருகிறாா்.
இவரிடம் அதே கல்லூரியில் தொழில்நுட்பநா் படிப்பில் படிக்கும் 17 வயது மாணவி மாா்ச் 12-ஆம் தேதி விபத்து மற்றும் அவசர சிகிச்சை பிரிவுக்கு வழி கேட்டாா். அப்போது, மாணவியை மனோஜ்குமாா் அப்பிரிவுக்கு அழைத்துச் சென்று பாலியல் தொல்லை கொடுத்தாராம்.
இதுகுறித்து தஞ்சாவூா் அனைத்து மகளிா் காவல் நிலையத்தினா் போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிந்து மனோஜ்குமாரை சனிக்கிழமை கைது செய்தனா்.