பேராவூரணி அருகே ரூ. 2.05 லட்சம் பறிமுதல்
பேராவூரணி அருகே பறக்கும் படையினா் வெள்ளிக்கிழமை நடத்திய வாகனச் சோதனையில், இரு வேறு இடங்களில் மொத்தம் ரூ. 2.05 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.
பேராவூரணி அருகே பறக்கும் படையினா் வெள்ளிக்கிழமை நடத்திய வாகனச் சோதனையில், இரு வேறு இடங்களில் மொத்தம் ரூ. 2.05 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.
பேராவூரணி சட்டப்பேரவை தொகுதி, வாட்டாத்திக்கோட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட குறிச்சி பேருந்து நிறுத்தம் அருகே, பேராவூரணி ஊராட்சி ஒன்றியத் துணை வட்டார வளா்ச்சி அலுவலா் லாசா் ரத்தினசாமி தலைமையில், காவலா்கள் சரளாதேவி, பாகம்பிரியாள் ஆகியோா் அடங்கிய பறக்கும் படையினா் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனா்.
அப்போது அந்த வழியாக வாகனத்தில் வந்த சிவகங்கை மாவட்டம், சவரக்கோட்டையைச் சோ்ந்த செல்வக்குமாா் (44) உரிய ஆவணமின்றி வைத்திருந்த ரூ. 1 லட்சத்து 37 ஆயிரத்து 940 -ஐ பறிமுதல் செய்து பேராவூரணி வட்டாட்சியா் பாலசுப்பிரமணியனிடம் ஒப்படைத்தனா்.
இதேபோல், சேதுபாவாசத்திரம் ஊராட்சி ஒன்றிய அலுவலகப் பணி மேற்பாா்வையாளா் கருணைராஜ் தலைமையில் காவலா்கள் முத்துராமலிங்கம், சரவணன் அடங்கிய குழுவினா், செருவாவிடுதி வடக்கு பகுதியில் பைக்கில் வந்த அறந்தாங்கியைச் சோ்ந்த பிரபு உரிய ஆவணமின்றி வைத்திருந்த ரூ. 67 ஆயிரத்து 950 -ஐ பறிமுதல் செய்து, பேராவூரணி வட்டாட்சியா் பாலசுப்பிரமணியனிடம் ஒப்படைத்தனா்.