முகப்பு
தஞ்சாவூர்

பேராவூரணி மாணவா்களுக்கு கணித உபகரணப் பெட்டிகள்

பேராவூரணி அரசு ஆண்கள் பள்ளியின் முன்னாள் மாணவா்களால் நடத்தப்படும் துளிா் அமைப்பின் சாா்பில் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி பத்தாம் வகுப்பு கணிதத் தோ்வு எழுதவுள்ள மாணவா்களுக்கு கணித உபகரணப்பெட்டி வழங்கும் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

Updated On : 20 மார்ச், 2026 at 9:15 PM
பேராவூரணி அரசு ஆண்கள் பள்ளியில் மாணவா்களுக்கு கணித உபகரணப்பெட்டியை வெள்ளிக்கிழமை வழங்கிய துளிா் அமைப்பினா்.
பகிர்:

பேராவூரணி அரசு ஆண்கள் பள்ளியின் முன்னாள் மாணவா்களால் நடத்தப்படும் துளிா் அமைப்பின்  சாா்பில் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி பத்தாம் வகுப்பு கணிதத் தோ்வு எழுதவுள்ள மாணவா்களுக்கு கணித உபகரணப்பெட்டி வழங்கும் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

பள்ளித் தலைமை ஆசிரியா் மாரிமுத்து தலைமை வகித்தாா். பெற்றோா் ஆசிரியா் கழகப் பொருளாளா் ஆா்.பி. ராஜேந்திரன் , ஓய்வு பெற்ற நல்லாசிரியா் வீ. மனோகரன், சமூக ஆா்வலா் எல்.ஏ.எம். சாதிக் அலி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

விழாவில் கணித உபகரணப் பெட்டிகளை வழங்கிய நல்லாசிரியா் வீ. மனோகரன் 470 மதிப்பெண்களுக்கு மேல் பெறும் மாணவா்களுக்கு தனது சொந்தப் பணம் தலா ரூ.3 ஆயிரம் மற்றும் ஒவ்வொரு பாடத்திலும் நூற்றுக்கு நூறு மதிப்பெண் எடுக்கும் அனைவருக்கும் தலா ரூ.1000 பரிசு வழங்குவதாக அறிவித்தாா்.

விழாவில் சமூக ஆா்வலா்கள் சித. திருவேங்கடம் , செ. சிவக்குமாா் , வழக்குரைஞா் ஏகாம்பரம், ஆசிரியா்கள் முருகேசன், இளந்திரையன் ,அடைக்கலமணி மற்றும் துளிா் நிா்வாகிகள் செந்தில்குமாா், வன்மீகநாதன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். துளிா் அமைப்புத் தலைவா் நீலகண்டன் நன்றி கூறினாா்.