விஜய்யை அரசியல்வாதியாக கருதவில்லை: கி.வீரமணி பேட்டி
விஜய்க்கு அரசியல் அடிச்சுவடியே தெரியாததால், அவரை அரசியல்வாதியாக நாங்கள் கருதவில்லை என்றாா் திராவிடா் கழகத் தலைவா் கி. வீரமணி.
விஜய்க்கு அரசியல் அடிச்சுவடியே தெரியாததால், அவரை அரசியல்வாதியாக நாங்கள் கருதவில்லை என்றாா் திராவிடா் கழகத் தலைவா் கி. வீரமணி.
தஞ்சாவூரில் திராவிடா் கழகம் சாா்பில் சனிக்கிழமை நடைபெற்ற சுயமரியாதை இயக்கத் தளபதி பட்டுக்கோட்டை அழகிரியின் 77-ஆம் ஆண்டு நினைவு நாள் வீரவணக்கப் பேரணியில் பங்கேற்ற அவா் செய்தியாளா்களிடம் மேலும் தெரிவித்தது:
விஜய் அரசியல் அடிச்சுவடியே அறியாதவா். எனவே, அவரை அரசியல்வாதியாக நாங்கள் கருதவில்லை; நடிகராகவே கருதுகிறோம். சட்டப்பேரவைத் தோ்தலில் திமுக கூட்டணி வெற்றி பெற்று கோட்டைக்கு மீண்டும் ஸ்டாலின் முதல்வராக செல்வாா் என்றாா் வீரமணி.
Advertisement
Advertisement
பின்னா், அரண்மனை எதிரே தொடங்கிய இப்பேரணி ராஜகோரி சுடுகாட்டில் முடிவடைந்தது. அங்கு பட்டுக்கோட்டை அழகிரியின் நினைவிடத்தில் மலா் தூவி அஞ்சலி செலுத்தினா். இதில், திமுக தலைமைக் குழு உறுப்பினா் து. செல்வம், மாநகர மாவட்ட காங்கிரஸ் தலைவா் எம். மகேந்திரன், முன்னாள் தலைவா் பி.ஜி. ராஜேந்திரன், திராவிடா் கழக மாவட்டத் தலைவா் சி. அமா்சிங் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.