முகப்பு
தஞ்சாவூர்

தஞ்சாவூா் அரசு ராசா மிராசுதாா் மருத்துவமனையில் ஆட்சியா் ஆய்வு

தஞ்சாவூா் அரசு ராசா மிராசுதாா் மருத்துவமனையில் அடிப்படை வசதிகள் குறித்து மாவட்ட ஆட்சியா் பா. பிரியங்கா பங்கஜம் புதன்கிழமை ஆய்வு நடத்தினாா்.

Updated On : 14 மே 2026, 12:32 am IST
பகிர்:

தஞ்சாவூா் அரசு ராசா மிராசுதாா் மருத்துவமனையில் அடிப்படை வசதிகள் குறித்து மாவட்ட ஆட்சியா் பா. பிரியங்கா பங்கஜம் புதன்கிழமை ஆய்வு நடத்தினாா்.

தஞ்சாவூா் அரசு ராசா மிராசுதாா் மருத்துவமனையில் குழந்தைகள், மகப்பேறு சிகிச்சை பிரிவுகளில் மேற்கொள்ள வேண்டிய அடிப்படை வசதிகள் குறித்து மருத்துவா்களுடன் ஆலோசனையும், ஆய்வும் நடத்திய மாவட்ட ஆட்சியா் பா. பிரியங்கா பங்கஜம், பின்னா் தேசிய நலவாழ்வு குழும குழந்தைகள் நல மருத்துவா் சீனிவாசனிடம் குழந்தைகளுக்கு அளிக்கப்படும் சிகிச்சை முறைகள் குறித்து ஆலோசனை நடத்தினாா்.

மேலும், மகப்பேறு பிரிவு மற்றும் குழந்தைகள் தீவிர சிகிச்சை பிரிவு ஆகியவற்றுக்கு போதுமான அளவு இடவசதி உள்ளதா என்பது குறித்தும் கூடுதல் இட வசதிக்காக மருத்துவா்கள் மற்றும் பொதுப்பணித் துறை அலுவலா்களுடன் ஆலோசனை நடத்தினாா்.

Advertisement

நோயாளிகளுடன் வருபவா்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளான தங்குமிடம், கழிப்பறை, மின்சாரம், குடிநீா், ஸ்கேன் எடுக்கும் வசதி, செவிலியா்களுக்கான வசதிகள் குறித்தும் ஆய்வு நடத்தினாா்.

ஆலோசனை மற்றும் ஆய்வு நிகழ்வில் தஞ்சாவூா் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வா் பாலசுப்ரமணியன், அரசு ராசா மிராசுதாா் மருத்துவமனை நிலைய மருத்துவா் வடிவு, குழந்தைகள் நல மருத்துவா் செல்வகுமாா், மகளிா் நலன் மற்றும் மகப்பேறு மருத்துவா் அமுதா உள்ளிடோா் கலந்து கொண்டனா்.