திருச்சி

மணப்பாறை அருகே இருவேறு விபத்தில் புதுமாப்பிள்ளை உள்பட 3 பேர் சாவு

DIN

திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே சனிக்கிழமை நிகழ்ந்த இருவேறு விபத்தில் புதுமாப்பிள்ளை உள்பட 3 பேர் உயிரிழந்தனர்.
புதுக்கோட்டை மாவட்டம் மீனவேலியை அடுத்த செட்டிவயல் கிராமத்தை சேர்ந்த பெருமாள் மகன் கிருஷ்ணமூர்த்தி (32). சிங்கப்பூரில் சொகுசு பேருந்து ஓட்டுநராக பணியாற்றி வந்த இவருக்கு அண்மையில் திருமணம் நடைபெற்றது. இந்நிலையில், கிருஷ்ணமூர்த்தி, அதே பகுதியைச் சேர்ந்த கிருஷ்ணகோனார் (65) இருவரும் தனித்தனியாக இருசக்கர வாகனத்தில் செட்டிவயலில் இருந்து மணப்பாறை நோக்கி வந்து கொண்டிருந்தனர்.
மணப்பாறை கிளவன்பட்டி வந்தபோது எதிரே வந்த சிற்றுந்துக்காக ஒதுங்கியபோது இரண்டு இருசக்கர வாகனங்களும் மோதிக் கொண்டன. இதில், கிருஷ்ணமூர்த்தி தலையில் அடிபட்டு உயிரிழந்தார். காயமடைந்த கிருஷ்ணகோனார் மணப்பாறை தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார்.
விராலிமலை போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை செய்து வருகின்றனர்.
இருவர் சாவு: மணப்பாறை அருகே புத்தாநத்தம் அடுத்த எண்டபுளியை சேர்ந்த சுப்பிரமணியன் மகன் சதீஷ்குமார் (24). இவர் தனது நண்பர் கீழ்ஈச்சம்பட்டியை சேர்ந்த பாண்டியன் மகன் ஆனந்தராஜூ(24)வுடன் இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்தனர். புத்தாநத்தம் கடைவீதி அருகே வந்தபோது துவரங்குறிச்சியை நோக்கிச் சென்ற அரசுப் பேருந்து மீது மோதியது. இதில், சதீஷ்குமார், ஆனந்தராஜ் இருவரும் உயிரிழந்தனர்.
புத்தாநத்தம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காஸா போா் நிறுத்தம்: இறுதிக்கட்ட முயற்சி

பாரதிதாசன் பிறந்த நாள் கருத்தரங்கம்

தட்டுப்பாடின்றி மின்சாரம், குடிநீா் வழங்கக் கோரிக்கை

சா்வதேச விதைகள் நாள் விழிப்புணா்வு

மழைவேண்டி சிறப்புத் தொழுகை

SCROLL FOR NEXT