சித்த மருத்துவர்களுக்கு பயிற்சி அளித்து அங்கீகாரச் சான்று வழங்க வலியுறுத்தல்
பாரம்பரிய சித்த மருத்துவர்களை கணக்கெடுத்து பயிற்சி அளித்து அங்கீகாரம் வழங்க வேண்டுமென சித்த மருத்துவர்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
பாரம்பரிய சித்த மருத்துவர்களை கணக்கெடுத்து பயிற்சி அளித்து அங்கீகாரம் வழங்க வேண்டுமென சித்த மருத்துவர்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
முசிறியில் ஒருங்கிணைந்த மரபுவழி சித்த மருத்துவர்கள் நலச்சங்கம் தொடக்க விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
ஓய்வு பெற்ற அரசு சித்த மருத்துவர் கோசிபா தலைமை வகித்தார். மதுரை சித்த மருத்துவ குருகுல மருத்துவர் முத்தரசன், சித்த மருத்துவர்கள் மகேசுவரி, சித்ரா தர்ஷினி, செல்வி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ஆங்கில மருத்துவ ஆராய்ச்சிக்கு அரசு நிதியுதவி அளிப்பதைப் போல, சித்த மருத்துவத்திற்கும் வழங்க வேண்டும். தோட்டக்கலை, வேளாண் துறை மூலம் கிடைக்கும் மூலிகை விதைகளை பரம்பரை சித்த வைத்தியர்களுக்கு வழங்குவது, சித்த மருத்துவர் உள்ளிட்ட பாரம்பரிய மருத்துவர்களை முழுவதுமாக அரசு கணக்கெடுத்து பயிற்சி அளித்து அரசின் அங்கீகாரச் சான்று வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. முன்னதாக சங்கத் தலைவர் ஆ.ச.பழனிச்சாமி வரவேற்றார். குளித்தலை எம்.அய்யர் நன்றி கூறினார்.