தொழிலாளியை தாக்கிய இருவர் கைது
காட்டுப்புத்தூரில் முன்விரோதத்தில் கட்டடத் தொழிலாளியை தாக்கியதாக இருவர் ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டனர்.
காட்டுப்புத்தூரில் முன்விரோதத்தில் கட்டடத் தொழிலாளியை தாக்கியதாக இருவர் ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டனர்.
காட்டுப்புத்தூர் புதுத்தெருவைச் சேர்ந்த குமாரசாமி மகன் சிவசங்கர்(35). கட்டடத் தொழிலாளியான இவரை, அதே பகுதியைச் சேர்ந்த ரமாதுரை மகன் பாலமுருகன்(21), கீழத்தெருவைச் சேர்ந்த சுப்பிரமணி மகன் ரவிக்குமார்(22) மற்றும் சிலர் சேர்ந்து தாக்கியுள்ளனர். காயமடைந்த சிவசங்கர் தொட்டியம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இதுகுறித்து காட்டுப்புத்தூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து பாலமுருகன், ரவிக்குமார் இருவரையும் கைது செய்தனர்.