மோட்டார் சைக்கிள் மோதி முதியவர் சாவு
திருச்சி சுப்பிரமணியபுரம் பகுதியில் சாலையில் மோட்டார் சைக்கிள் மோதியதில் முதியவர் உயிரிழந்தார்.
திருச்சி சுப்பிரமணியபுரம் பகுதியில் சாலையில் மோட்டார் சைக்கிள் மோதியதில் முதியவர் உயிரிழந்தார்.
சுப்பிரமணியபுரம் பென்ஷனர் தெருவைச் சேர்ந்தவர் ரகுபதி (60). இவர் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை அப்பகுதியிலுள்ள கழிப்பறைக்குச் சென்று விட்டு, திருச்சி - புதுக்கோட்டை சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார்.
அப்போது அந்த வழியாக வந்த மோட்டார் சைக்கிள் ரகுபதி மீது மோதியது.
இதில் பலத்த காயமடைந்த ரகுபதியை அக்கம் பக்கத்தினர் மீட்டு 108 ஆம்புலன்ஸில் அனுப்பி வைத்தனர். ஆனால் அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே உயிரிழந்தார். விபத்து குறித்து திருச்சி கண்டோன்மெண்ட் தெற்கு போக்குவரத்துப் புலனாய்வுப் பிரிவு போலீஸார் வழக்குப் பதிந்து, மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்தவரைத் தேடி வருகின்றனர்.