துவரங்குறிச்சியில் அமமுக கொடியேற்று விழா
மணப்பாறை அடுத்த மருங்காபுரி ஒன்றியம் துவரங்குறிச்சியில், திருச்சி வடக்கு மாவட்டம் அமமுக கட்சி சார்பாக அமமுக கொடியேற்று விழா திங்கள்கிழமை நடைபெற்றது.
மணப்பாறை அடுத்த மருங்காபுரி ஒன்றியம் துவரங்குறிச்சியில், திருச்சி வடக்கு மாவட்டம் அமமுக கட்சி சார்பாக அமமுக கொடியேற்று விழா திங்கள்கிழமை நடைபெற்றது.
பொன்னம்பட்டி பேரூர் கழகத்திற்குட்பட்ட துலுக்கம்பட்டி, அய்யனார்கோவில்பட்டி. ஆத்துப்பட்டி. சடவேலாம்பட்டி, பொன்னம்பட்டி, மலம்பட்டி ஆகிய இடங்களில் பொன்னம்பட்டி பேரூர் கழகச் செயலர் சாகுல்ஹமீது தலைமையில் நடந்த விழாவில் முன்னாள் அரசு தலைமைக் கொறடாவும் அமமுக திருச்சி வடக்கு மாவட்டச் செயலருமான ஆர். மனோகரன் கொடியேற்றி, அன்னதானம் வழங்கினார்.
ஒன்றிய செயலர் அருணாச்சலம் (எ) பெருமாள், மாவட்ட இளைஞரணி இணைச் செயலாளர் செந்தமிழ்ச்செல்வன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். விழாவில் உறுப்பினர் சேர்க்கைக் விண்ணப்பம் கிளைக் கழகங்களில் வழங்கப்பட்டது.