திருச்சி

துவரங்குறிச்சி அருகே  கார் மோதி முதியவர் சாவு 

DIN

மணப்பாறை அருகேயுள்ள துவரங்குறிச்சியில் கார் மோதி புதுக்கோட்டையைச் சேர்ந்த முதியவர் இறந்தார்.
புதுக்கோட்டை மாவட்டம், இலுப்பூரை அடுத்த பெரிட்சிப்பட்டி அருகே உள்ள ஆணையம்தோப்பைச் சேர்ந்தவர் மூக்கன் மகன் திருவன் (56). இவர் மணப்பாறையை அடுத்த துவரங்குறிச்சி அருகே சேத்துப்பட்டியில் உள்ள உறவினர் இல்லத்துக்கு ஞாயிற்றுக்கிழமை  பேருந்தில் வந்த இவர் நடந்து சென்றபோது திருச்சியிலிருந்து மதுரை நோக்கி சென்ற கார் மோதி உயிரிழந்தார். தகவலறிந்து வந்த போலீஸார் அவரது சடலத்தைக் கைப்பற்றி மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். சம்பவம் குறித்து வழக்கு பதிந்து கார் ஓட்டுநர் மதுரை சிம்மக்கல்லை சேர்ந்த செந்திலை (26) என்பரை கைது செய்து விசாரிக்கின்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

75 வயது முதியவா் மீண்டும் பிரதமராக வேண்டுமா? லாலு மகள் மிசா பாரதி பிரசாரம்

வரத்துக் குறைவால் பூண்டு விலை அதிகரிப்பு!

தூத்துக்குடியில் தீத்தடுப்பு, தொழிற்சாலைகள் பாதுகாப்புக் குழு ஆலோசனைக் கூட்டம்

ஓய்வு பெற்ற ரயில்வே ஊழியா் மயங்கி விழுந்து உயிரிழப்பு

கொளுத்தும் வெயில்..!

SCROLL FOR NEXT