திருச்சி

பொறியியல் மாணவியிடம் நகை பறிப்பு

DIN

திருச்சி கே.கே.நகர் பகுதியில்  பொறியியல் மாணவியிடம் நகையைப் பறித்துச் சென்ற நபரை போலீஸார் தேடி வருகின்றனர்.
கே.கே.நகர் கிருஷ்ணமூர்த்தி நகரைச் சேர்ந்த ஜகதீஷ் மகள் சுவேதா (20).  அண்ணா பல்கலைக்கழகத்தில் பொறியியல் பயின்று வரும் இவர், வீட்டுக்கு அருகிலுள்ள தட்டச்சு பயிற்சி நிலையத்தில் பயிற்சி பெற்று வருகிறார். திங்கள்கிழமை மாலை பயிற்சி முடித்து விட்டு வீட்டுக்கு நடந்து சென்று கொண்டிருந்தபோது,  அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த மூவர், சுவேதா கழுத்திலிருந்த ஒன்றரை பவுன் சங்கிலி, செல்லிடப்பேசி ஆகியவற்றை பறித்துச் சென்றனர்.
இதுகுறித்து கே.கே.நகர் காவல் நிலையத்தில் சுவேதா அளித்த புகாரின் பேரில் போலீஸார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரூ.4 கோடி பறிமுதல் - சிபிசிஐடி போலீசார் வழக்குப்பதிவு

செந்தில் பாலாஜி வழக்கு: உச்ச நீதிமன்றத்தில் மன்னிப்புக் கேட்ட அமலாக்கத்துறை

சென்னையில் வாட்டும் வெயில் மட்டுமா.. குடிநீர் தட்டுப்பாடும் வருமா? ஏரிகளின் நீர்மட்ட நிலவரம்!

சென்னைக்கு கோடையில் குடிநீர் தட்டுப்பாடு வர வாய்ப்பு இல்லை

வெங்கடேஷ் பட்டின் ‘டாப் குக்கு டூப் குக்கு’!

SCROLL FOR NEXT