இளையோர் நினைத்தால் மாற்றத்தை ஏற்படுத்த முடியும்: டிஐஜி லலிதா லட்சுமி
இளையோர் நினைத்தால் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்த முடியும் என்றார் திருச்சி சரக டிஐஜி லலிதா லட்சுமி.
இளையோர் நினைத்தால் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்த முடியும் என்றார் திருச்சி சரக டிஐஜி லலிதா லட்சுமி.
திருச்சி உருமு தனலட்சுமி கல்லூரியில் 48-ஆவது கல்லூரி தினவிழா புதன்கிழமை நடைபெற்றது. இதில், சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று அவர் மேலும் பேசியது:
கல்வி கற்பதற்கான சிறந்த தளமாக திருச்சி நீண்ட காலமாக விளங்கி வருகிறது. இங்கு கல்வி கற்றவர்கள் மிகப்பெரிய பதவிகளில் வகித்துள்ளனர். நேர்வழியில் பெறும் வெற்றியே நிலைத்திருக்கும். கடமையைச் சரியாக செய்யும் நபர்களுக்கு மட்டுமே உரிமையைப் பற்றி பேசும் அதிகாரமுண்டு. படிப்பு முடிந்தபின் விருப்பமான துறையில் பணியை தேர்வு செய்வது மிக முக்கியம். உங்களைப்போன்ற இளையோர் நினைத்தால் எத்தகு மாற்றத்தையும் ஏற்படுத்த முடியும் என்றார் அவர்.
நிகழ்ச்சியில், கல்லூரி தலைவர் பத்மா ராமகிருஷ்ணன், முதல்வர் ஈ. கிறிஸ்டி செல்வராணி, முனைவர்கள் சிவக்குமார், வீரமணி, இந்திராகுமாரி, பிரதீபா உள்ளிட்டோர் பங்கேற்றனர். தொடர்ந்து 20 ஆண்டுகள் பணியாற்றியோருக்கு விருது மற்றும் நினைவுப் பரிசுகள் வழங்கப்பட்டன. மாணவ, மாணவியரின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.