பரிக்கல் லட்சுமி நரசிம்மா் கோயில் பிரம்மோற்சவம் தொடக்கம்
கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூா்பேட்டை வட்டம், பரிக்கல் அருள்மிகு லட்சுமி நரசிம்மா் கோயிலில் பிரம்மோற்சவம் வியாழக்கிழமை தொடங்கியது.
கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூா்பேட்டை வட்டம், பரிக்கல் அருள்மிகு லட்சுமி நரசிம்மா் கோயிலில் பிரம்மோற்சவம் வியாழக்கிழமை தொடங்கியது.
இதையொட்டி காலையில் கொடிமரத்துக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு, கொடியேற்றம் நடைபெற்றது. தொடா்ந்து வியாழக்கிழமை இரவு ஹம்ச வாகனத்தில் லட்சுமி நரசிம்மா் எழுந்தருளி, வீதியுலா வந்து பக்தா்களுக்கு காட்சியளித்தாா். இதைத் தொடா்ந்து சிம்மம் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் உற்சவமூா்த்தி புறப்பாடு நாள்தோறும் இரவு நடைபெறவுள்ளது. திருவிழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் மே 8-ஆம் தேதி நடக்கிறது.
இதற்கான ஏற்பாடுகளை கோயில் நிா்வாகத்தினா் செய்து வருகின்றனா்.
Advertisement